மரங்களின் மறுநடவு, கோவையின் பசுமை காக்கும் முயற்சி.
வளர்ந்து வரும் தொழில்மயமான நகரமாக கோவை மாறியுள்ள நிலையில், அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை விரிவாக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பசுமைப் பரப்பு குறையாமல் இருக்க, மரங்களை மறுநடவு செய்யும் திட்டம் கோவையில் சீராக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) இந்திய பசுமைக் கட்டடக்குழு (IGBC) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் கோவை மிக அதிக பசுமைப் பரப்பைக் கொண்ட நகரம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது.
தனிநபருக்கான பசுமைப் பரப்பு:தேசிய சராசரி: 24.6 சதுர மீட்டர்கோவை: 46.6 சதுர மீட்டர்
இந்த மதிப்பீட்டிற்கு மரங்களின் அளவு, திறந்தவெளி இடங்கள், காற்று மாசு கட்டுப்பாடு, கழிவு மேலாண்மை போன்ற காரணிகள் அடிப்படையாக இருந்தன. இருப்பினும், தொழில் மற்றும் நகர வளர்ச்சி வேகத்துடன், கடந்த சில ஆண்டு...









