
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாதங்கள் வளர்ச்சி அடைந்த குட்டி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானை: மே 17ஆம் தேதி, கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் வழியெறிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்தது. அதன் அருகில், அதற்குச் சொந்தமான குட்டி யானையும் பயமுடனும் பரிதாபமாகவும் நின்றுக்கொண்டிருந்தது. உடனடியாக தகவலறிந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவக் குழு போராடியப் பிறகும் உயிரிழப்பு : யானையின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வ...