
தேனி மாவட்டத்தில் தனி அடையாள எண் பெற 28,974 விவசாயிகள் பதிவு!
தேனி மாவட்டத்தில் மொத்தம் 50,189 விவசாயிகள் உள்ளனர். இதில், தாலுகா வாரியாக தேனி - 2,839, ஆண்டிபட்டி - 6,904, பெரியகுளம் - 5,496, போடி - 4,577, உத்தமபாளையம் - 9,158 விவசாயிகள் என மொத்தம் 28,974 பேர் தனி அடையாள எண் பெறும் வகையில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்துள்ளனர்.
மீதமுள்ள விவசாயிகள் மார்ச் 31க்குள் இந்த சிறப்பு முகாம்களில் பதிவு செய்யுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் தொழில் தொடங்குவதற்காக, வேளாண்துறை அரசு ரூ.1 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்குகிறது. இந்த ஆண்டு, போடி, பெரியகுளம், தேனி ஆகிய வேளாண் இயக்குனர் வட்டாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பயன்களை பெற, வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுடன், கலை அறிவியலில் பட்டம் பெற்றவர்கள...