Thursday, April 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,040

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,040

தமிழ்நாடு
கடந்த சில நாட்களாக நிலவும் மாறுபாடுகளுக்கு பிறகு, இன்று (ஏப்ரல் 24) சென்னை மார்க்கெட்டில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.72,040 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து, ரூ.9,005 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் ஏப்ரல் 22ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.74,320-ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.9,290-ஆகவும் இருந்தது. ஆனால் ஏப்ரல் 23ஆம் தேதி தங்க விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 வீழ்ச்சி ஏற்பட்டு, விலை ரூ.72,120 ஆக குறைந்தது. இதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.9,015 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதாவது, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் ரூ.2,280 சரிந்துள்ளது. இது தற்போதைய சந்தை நிலவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகும். தங்கம் விலையைக் கவனித்து வரும் நகைப்பிரிய...
மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருட தடை – தமிழக அரசு புதிய உத்தரவு

மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருட தடை – தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழ்நாடு
முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருட காலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தற்போது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் உடனடியாக அமலில் வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மயோனைஸ் இன்று தெரு உணவுகள், ஷவர்மா, வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி வகை அசைவ உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முட்டை அடிப்படையிலான மயோனைஸ், குறிப்பாக சுடப்படாத நிலையில் பயன்படுத்தப்படும் போது, அதை உண்பவர்களுக்கு தீவிர சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அரசுப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், உடனடியாக முட்டை அடிப்படையிலான மயோனைஸ் தயாரிப்பு, விற்பனை, விநியோகம் ஆகிய அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இதனை மீறுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அரசாணையில் குறிப்...
தமிழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என் அறிவிப்பு!

தமிழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என் அறிவிப்பு!

தமிழ்நாடு
தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக கவர்னர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தொடர்பாக மாநில அரசு மற்றும் கவர்னர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டது. இந்த வழக்கில், முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதல்வரிடம் தான் உள்ளது என்றும், சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பு தமிழக அரசுக்குத் தோல்வியல்ல என்றும், அரசின் சட்ட செயல்பாடுகளுக்கு ஆதரவாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இ...
தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

தமிழ்நாடு
பூமியின் அடியில் புதைந்திருந்த தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு – ஆய்வாளர்கள் வியப்பு புதுக்கோட்டை: தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் மீண்டும் ஒருமுறை உலகைத் தன் பக்கம் திருப்பவகையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பகுதியில் நடந்து வரும் தொல்லியல் அகழாய்வில் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த அகழாய்வில், பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் தங்கம் பதிக்கப்பட்ட குண்டு மணி, மூடப்பட்ட மண் பானைகள், வட்டக்கற்கள் உள்ளிட்ட அரிய வரலாற்று சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியலாளர் குழுவினர் தங்கள் ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். இக்கண்டெடுப்புகள் தமிழ் நாகரிகத்தின் தொன்மை மற்றும் வளர்ச்சி குறித்து புதிய விளக்கங்களை அளிக்கின்றன. குறிப்பாக, தங்கம்...
மாநில சுயாட்சிக்கான குழுவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மாநில சுயாட்சிக்கான குழுவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில அரசு எடுக்கும் முடிவுகளில் மாநிலத்திற்கு கூடுதல் சுயாட்சி வழங்க வேண்டும் என்று வலுவான குரலை எழுப்பியுள்ளார். மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் திமுக தலைமையிலான அரசுக்கு ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து இது வந்துள்ளது. புதிய மாநில சுயாட்சியை பரிந்துரைத்து, மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் உயர்மட்டக் குழுவை நியமிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படும், இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மு. நாகராஜன் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்தக் குழு ஜனவரி 2026 இறுதிக்குள் ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை மாநிலத்திற்கு சமர்ப்பிக்கும், மேலும் இரண்டு ஆண்டுகளுக...
இந்தியாவின் முதல் செங்குத்துத் தூக்கு ரயில் பாலம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தியாவின் முதல் செங்குத்துத் தூக்கு ரயில் பாலம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு, பாரதம்
இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தார். புனித ராம நவமி நாளில், இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்படும் புதிய பாம்பன் ரயில் பாலம் இன்று மதியம் 1 மணியளவில், பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) இடையிலான புதிய ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், சாலை பாலத்தின் மேல் நின்று, ஒரே நேரத்தில் ஒரு ரயிலுக்கும், ஒரு கப்பலுக்கும் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின், அவர் செங்குத்துத் தூக்கு பாலத்தில் போக்குவரத்து செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கலந்து கொண்டார். இந்தியாவின் முதல் செங்குத்து...
தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி – ஒன்றிய அரசின் அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி – ஒன்றிய அரசின் அறிவிப்பு!

தமிழ்நாடு, பாரதம்
தமிழ்நாட்டில் புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு, மாநிலத்துக்கு ரூ.522.34 கோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதியுடன் விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தமாக, 2024-25 நிதியாண்டில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) கீழ், மேலும் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதி (NDRF) கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், பீகார் ரூ.588.73 கோடி நிவாரணத் தொகையை பெற்றுள்ள நிலையில், அதன் பின்பே தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை வெளியிட்ட அறிக்கையில், “நரேந்திர மோடி தலைமைய...
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் – இன்று முதல் அமல்

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் – இன்று முதல் அமல்

தமிழ்நாடு
ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று (ஏப்ரல் 1) முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு மே 7 முதல் இ-பாஸ் நடைமுறையில் கொண்டுவரப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், தற்போது மீண்டும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின்படி, இம்முறை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டக் கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்ததாவது:"ஏப்ரல் 1 முதல், ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள...
தமிழகத்தில் இன்று முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழகத்தில் இன்று முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 01) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, 5 முதல் 25 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கும் படி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் பேரில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலை, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையின் வானகரம் சுங்கச்சாவடி, தாம்பரம் - புழல் நெடுஞ்சாலை உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் உயர்ந்த கட்டணம் இன்று முதல் வசூலிக்கப்படுகிறது. இந்த மாற்றம் நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கட்டண அமைப்பு 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தின் 78 சுங்கச்சாவடிகளில் 40 சுங்கச்சாவடிகளில் இன...
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை காலமானார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை காலமானார்.

தமிழ்நாடு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனின் தந்தை ரா. சுப்புராம் இன்று அதிகாலை இயற்கை எய்தியதை அடுத்து, அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சு.வெங்கடேசன். இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். மாணவப் பருவத்தில் இருந்து இந்திய மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் இவர் 2-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார். இதனிடையே மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார். இவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நாவலின் முக்கிய பகுதிகளை தழுவியே 2012-ம் ஆண்டு 'அரவான்' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். இந்த நி...