மதுரை–செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் 2 புதிய ரயில் நிலையங்கள்!
oplus_34
மதுரை–செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய இரு இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்துள்ள இந்த ஒப்புதல், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு புதிய ரயில் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வரும்போது, சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை–செங்கோட்டை ரயில் பாதை தென்மாவட்ட மக்களின் முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் ரயில் நிலையங்க...









