நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
நீட் தேர்வை (NEET) தேசிய அளவில் கைவிட்டு, தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். தீர்மானத்திற்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வு முறையை கைவிட வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தமிழக சட்டப்...









