
ரஷ்யா அதிபர் புடினும், அமெரிக்க அதிபர் டிரம்பும் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேசினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மேற்கொண்ட இரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புடின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "உக்ரைனில் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யா தயாராக உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
2022 பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா யுத்தம், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், பெரும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் யுத்தத்தை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து, நேற்று முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் இரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலுக்குப் பிறகு புடின் கூறியதாவது: “ரஷ்யா, உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக உள்ளது. டிரம்புடன் நேர்மையான, ஆழமான பேச்சு நடத்தினோம். இருநாடுகளுக்கும் ஏற்ற வகையி...