இறுதிக்கட்டத்தில் சிட்னி டெஸ்ட் மேட்ச் – போராடும் இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் ஆட்டம் பரபரப்பான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தொடரை சமநிலையாக்கவேண்டும் என்ற உறுதியுடன், இந்திய வீரர்கள் வெற்றிக்காக போராடி வருகின்றனர்.
இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில், இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. தற்போது, கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 9/1 ரன்கள் எடுத்து, 176 ரன்கள் பின்தங்கியது. இரண்டாவது நாளில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது நாள் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
இன்று (ஜனவரி 5) மூன்றாவது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய பவுலர்கள் இன்னு...