ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய குத்துச்சண்டை வீரர்கள் இன்று பங்கேற்கின்றனர்.
மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் இன்று தங்கள் விளையாட்டை தொடங்குகின்றனர். பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளான நிகத் ஜரீன், லோவ்லினா போர்கோஹைன், ஜெய்ஸ்மின் லம்போரியா, அங்குஷிதா போரோ, அருந்ததி சவுத்ரி மற்றும் அல்ஃபியா பதான் ஆகியோர் முன்னேறுவார்கள் என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான டிராவில் ப்ரீத்தி பவார் 54 கிலோ பிரிவில் கஜகஸ்தானின் எலினா பசரோவாவை எதிர்கொள்கிறார், பிரியா 60 கிலோ பிரிவில் கஜகஸ்தானின் ரிம்மா வோலோசென்கோவை எதிர்கொள்கிறார். மினாக்ஷி ஹூடா ஜப்பானின் யுகா சதாமட்சுவை சந்திக்கிறார், பூஜா ராணி கஜகஸ்தானின் நடேஷ்டா ரியாபெட்ஸை எதிர்கொள்கிறார்.
ஆடவர் பிரிவில், விஸ்வநாத் சுரேஷ் கிர்கிஸ்தானின் பெக்ஸாட் எர்கேஷோவை எதிர்த்து தனது முதல் போட்டியில் களமிறங்குகிறார். அதே நேரத்தில், ஜதுமணி ச...








