தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமான கற்கள் ஏற்றுமதிக்கு தடை!
தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறையைத் தவிர்க்கும் நோக்கில், பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாநிலத்தில் சாலை, பாலம், தொழிற்பேட்டை, வீட்டு வசதித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜல்லி, கட்டுமானக் கற்கள், கண்டாஸ், பாறைகள், ...









