
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று (ஏப்ரல் 25) தொடங்கியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் உள்ள அழகிய ராஜ்பவனில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான மாநாடு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் முன்னெடுப்பில் நடைபெறுகிறது. இவர் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து தொடங்கப்பட்ட இந்த தொடர் மாநாடு, இப்போது நான்காவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், மாநிலம் மற்றும் நாட்டின் கல்வி நிலையை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதும், பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் ஆகும்.
இம்மாநாட்டை இந்திய துணை ஜனாதிபதி திரு. ஜெகதீப் தன்கர் சிறப்பாக தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழ்நாட்டிலுள்ள 21 அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 25 தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 32 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் இதுவரை இதில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.