
தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது!
சமீபக் காலமாக சர்வதேச சந்தையின் பாதிப்பால் தங்கத்தின் விலை முன்னோடியாக உயர்ந்து வருகின்றது. தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.72,000-ஐத் தாண்டியுள்ளது. இதனால், திருமணத் திட்டங்களை முன்னெடுத்து செல்லும் அளவில் வசதியின்றி வாழும் ஏழை மக்கள், குறிப்பாக மகள்களுக்கு திருமணம் செய்யத் திட்டமிட்டிருக்கும் குடும்பங்கள், கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையை உளவு துறையின் வாயிலாக கவனித்த தமிழக அரசு, ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட "மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தை" மீண்டும் செயல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு ரூ.25,000 நிதி உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். பட்டம் பெற்ற மணமகள்களுக்கு ரூ.50,000 நிதி உதவியுடன் அதே அளவு தங்க நாணயம் வழங்கப்ப...