Friday, November 28பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

தமிழ்நாடு
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிமுறைகள் இன்று, மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன் படி, ஏ.டி.எம். பரிவர்த்தனை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் கவனமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ நகரங்களில்: ஒரே மாதத்தில் 5 இலவச பரிவர்த்தனைகள் வரை மட்டும் கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். மெட்ரோ அல்லாத நகரங்களில்: மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள். இதைத் தாண்டும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகள் (உதா: பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட்) ஆகியவற்றுக்கும் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன் ரூ.6 இருந்த கட்டணம் தற்போது ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கிகள் இடையேயான ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான செலவினங்களைச் சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வ...
100 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது

100 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது

தமிழ்நாடு
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டம் தொடர்பான முக்கிய முன்னேற்றம் ஒன்றாக, மத்திய அரசு தற்போது தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதியை விடுவித்துள்ளது. 2005ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த இந்த வேலைத் திட்டம், 2008-09ம் ஆண்டு தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, பெண்கள் தங்களது வசிப்பிடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவில், ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை பெறும் உரிமையை இத்திட்டம் உறுதி செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 740 மாவட்டங்களில், 13.42 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் பங்குகொண்டு வருகின்றனர். இது ஊரக மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில், திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக மத்திய அரசு ரூ.4,034 கோடி நிதியை விடுவிக்காமல் நிறுத்தி...
“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த எங்கள் நிலைப்பாடு சரியானது” என்கிறார் தமிழக முதல்வர்!

“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த எங்கள் நிலைப்பாடு சரியானது” என்கிறார் தமிழக முதல்வர்!

தமிழ்நாடு
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்க்கும் மத்திய அரசின் முடிவு, திமுக மற்றும் தமிழக அரசுக்குக் "கடின உழைப்பால் கிடைத்த வெற்றி" என்று முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்தார். எதிர்க்கட்சியான அதிமுக இந்த அறிவிப்பை வரவேற்றது, அதே நேரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு அவர்கள் அளித்த தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாக இந்த அறிவிப்பு வந்ததாகக் கூறியது. “மிகவும் தேவையான சாதி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, மத்திய பாஜக அரசு இறுதியாக வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை - மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது ம...
“பாவேந்தர் பாரதிதாசன்” அவர்களின் 135-வது பிறந்த நாள்!

“பாவேந்தர் பாரதிதாசன்” அவர்களின் 135-வது பிறந்த நாள்!

தமிழ்நாடு
- இதழாசிரியர் பொன். வசந்தகுமாரன் பாவேந்தர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் புதுச்சேரியில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனக சுப்புரத்தினம். சுப்புரத்தினம் இளமையிலேயே கவி இயற்றும் திறம் பெற்றுத் திகழ்ந்தார். பாவேந்தர், ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார். புதுவை மகாவித்வான் ஆ.பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். புதுவை மாநிலக் கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார். பாவேந்தர் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். பாரதியாரின் புலமையும், எளிமையும் கவிஞரைக் கவர்ந்தன. பாரதி மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை ப...
தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது!

தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது!

தமிழ்நாடு
சமீபக் காலமாக சர்வதேச சந்தையின் பாதிப்பால் தங்கத்தின் விலை முன்னோடியாக உயர்ந்து வருகின்றது. தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.72,000-ஐத் தாண்டியுள்ளது. இதனால், திருமணத் திட்டங்களை முன்னெடுத்து செல்லும் அளவில் வசதியின்றி வாழும் ஏழை மக்கள், குறிப்பாக மகள்களுக்கு திருமணம் செய்யத் திட்டமிட்டிருக்கும் குடும்பங்கள், கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையை உளவு துறையின் வாயிலாக கவனித்த தமிழக அரசு, ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட "மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தை" மீண்டும் செயல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு ரூ.25,000 நிதி உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். பட்டம் பெற்ற மணமகள்களுக்கு ரூ.50,000 நிதி உதவியுடன் அதே அளவு தங்க நாணயம் வழங்கப்ப...
குரூப் 4 தேர்வு – ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 4 தேர்வு – ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாநிலம் முழுவதும் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தேர்வு வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலாக மூன்று மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24ஆம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி.வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பயிற்சி தரமானோர் குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி ப...
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு – துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு – துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று (ஏப்ரல் 25) தொடங்கியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் உள்ள அழகிய ராஜ்பவனில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மாநாடு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் முன்னெடுப்பில் நடைபெறுகிறது. இவர் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து தொடங்கப்பட்ட இந்த தொடர் மாநாடு, இப்போது நான்காவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், மாநிலம் மற்றும் நாட்டின் கல்வி நிலையை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதும், பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் ஆகும். இம்மாநாட்டை இந்திய துணை ஜனாதிபதி திரு. ஜெகதீப் தன்கர் சிறப்பாக தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழ்நாட்டிலுள்ள 21 அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 25 தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலைக்கழகங்களைச் ச...
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,040

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,040

தமிழ்நாடு
கடந்த சில நாட்களாக நிலவும் மாறுபாடுகளுக்கு பிறகு, இன்று (ஏப்ரல் 24) சென்னை மார்க்கெட்டில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.72,040 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து, ரூ.9,005 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் ஏப்ரல் 22ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.74,320-ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.9,290-ஆகவும் இருந்தது. ஆனால் ஏப்ரல் 23ஆம் தேதி தங்க விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 வீழ்ச்சி ஏற்பட்டு, விலை ரூ.72,120 ஆக குறைந்தது. இதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.9,015 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதாவது, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் ரூ.2,280 சரிந்துள்ளது. இது தற்போதைய சந்தை நிலவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகும். தங்கம் விலையைக் கவனித்து வரும் நகைப்பிரிய...
மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருட தடை – தமிழக அரசு புதிய உத்தரவு

மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருட தடை – தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழ்நாடு
முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஒரு வருட காலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தற்போது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் உடனடியாக அமலில் வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மயோனைஸ் இன்று தெரு உணவுகள், ஷவர்மா, வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி வகை அசைவ உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முட்டை அடிப்படையிலான மயோனைஸ், குறிப்பாக சுடப்படாத நிலையில் பயன்படுத்தப்படும் போது, அதை உண்பவர்களுக்கு தீவிர சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அரசுப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், உடனடியாக முட்டை அடிப்படையிலான மயோனைஸ் தயாரிப்பு, விற்பனை, விநியோகம் ஆகிய அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இதனை மீறுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அரசாணையில் குறிப்...
தமிழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என் அறிவிப்பு!

தமிழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என் அறிவிப்பு!

தமிழ்நாடு
தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக கவர்னர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தொடர்பாக மாநில அரசு மற்றும் கவர்னர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டது. இந்த வழக்கில், முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதல்வரிடம் தான் உள்ளது என்றும், சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பு தமிழக அரசுக்குத் தோல்வியல்ல என்றும், அரசின் சட்ட செயல்பாடுகளுக்கு ஆதரவாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இ...