“தனியாக ரோந்து செல்லாதீர்கள்” – போலீசாருக்கு அதிகாரிகள் கடும் உத்தரவு
சிறப்பு எஸ்.ஐ. படுகொலை சம்பவத்திற்குப் பிறகு, ரோந்து பணிகளில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள். திருப்பூர் மாவட்டம் சிக்கனூத்து கிராமத்தில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்திற்குப் பின், மாநிலம் முழுவதும் போலீஸ் ரோந்து பணிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத் தடுப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாரை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதையடுத்து, கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் மண்டல ஐ.ஜி.க்கள், ரோந்து பணிகளை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்றப் பகுதிகளின் அடையாளம்தமிழகத்தின் 1,321 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய எல்லைகளில், குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம...









