
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று (மே 5) அவரது வீட்டில் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சென்னை கிழக்கு அப்போலோ மருத்துவமனையில் வைகோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை மருத்துவமனை தரப்பிலோ, வைகோவின் குடும்பத்தாரிலோ, அல்லது ம.தி.மு.க. வட்டாரத்திலோ அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதனால் அவரது உடல்நிலை குறித்து ம.தி.மு.க. கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் சற்று பதட்டத்துடன் உள்ளனர்.