
26 பொதுமக்களின் உயிரைப் பறித்த ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, ஏப்ரல் 23 ஆம் தேதி குல்காமின் தன்மார்க்கில் இருந்து இம்தியாஸ் என்பவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்ததாக தெரிவித்தனர். விசாரணையின் போது, லஷ்கர் மறைவிடத்தைப் பற்றி தனக்குத் தெரியும் என்று இம்தியாஸ் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அங்கு இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஆற்றின் ஓடையில் குதித்ததாக போலீசார் கூறினர். வேகமான வைஷோ ஓடையில் குதித்த ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் காட்டும் ட்ரோன் காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர்.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி, மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.