பெண்கள் மட்டும் இழுக்கும் தேர்த்திருவிழா!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் வெகு விமர்ச்சியாக நடைபெறும் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த நிலையில் மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் அஷ்டமி சப்பரம் என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதாவது, மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம். அதிகாலையில் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா நடைபெறும...









