Tuesday, September 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

பெண்கள் மட்டும் இழுக்கும் தேர்த்திருவிழா!

பெண்கள் மட்டும் இழுக்கும் தேர்த்திருவிழா!

தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் வெகு விமர்ச்சியாக நடைபெறும் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த நிலையில் மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் அஷ்டமி சப்பரம் என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதாவது, மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம். அதிகாலையில் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா நடைபெறும...
பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவிப்பு!

பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவிப்பு!

தமிழ்நாடு
"பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" - சென்னை பத்திரிகையாளர் மன்றம். சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவரும் 17.12.2024 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கைகளில் ஒன்றான, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இன்று மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது ஏற்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியின் போது உயிரிழக்கும் பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இதுவரை 5 லட்சம் ருபாய் குடும்ப நல நிதியாக வழங்குபட்டு வந்ததை ரூ 10...
இடி, மின்னலுடன் கூடிய மழை!

இடி, மின்னலுடன் கூடிய மழை!

தமிழ்நாடு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகுந்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இதன் விளைவாக மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டுகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நகர்ந்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (19.12.2024) வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதிகளை நோக்கிச் செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (18.12.2024) வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகி...
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு (Chennai Press Club)  புதிதாக தேர்வாகியுள்ள நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு (Chennai Press Club) புதிதாக தேர்வாகியுள்ள நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு
1972ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கடைசியாக 1999ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், நீண்ட காலமாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால், மறைந்த எம்.யூ.ஜே மோகன் உள்ளிட்ட சிலர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. 25 ஆண்டுகளுக்கு பின்னர், பதிவுத்துறை சட்டத்தின் கீழ் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில் நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி மோதிய நிலையில், மொத்த 1,502 வாக்குகளில் 1,371 வாக்குகள் பதிவாகின. அதில், நீதிக்கான கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. சுரேஷ் வேதநாயகம் தலைவராகவும், அசிப் பொதுச் செயலாளராகவும், மணிகண்டன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், இணைச் செயலாளர...
விருதுநகர் பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம். விவசாயிகள் கவலை!

விருதுநகர் பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம். விவசாயிகள் கவலை!

தமிழ்நாடு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமங்களில் வெள்ள நீர் பயிர்களை அடித்து சென்றது. வெங்காயம், மிளகாய், சோளம், மல்லி போன்ற பயிர்கள் நாசமாகின. இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், கடனை கட்டுவதே கடினம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்....
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சென்னையில் காலமானார்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சென்னையில் காலமானார்!

தமிழ்நாடு
ஆழ்ந்த இரங்கல்கள்! காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார். ஈரோடு மாவட்டத்தில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ஈ.வெ.க.சம்பத், சமூக சீர்திருத்தவாதி ஈ.வெ.ரா. பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் மகன் ஆவார். இளங்கோவன் திராவிட இயக்கம் மற்றும் முற்போக்கான கொள்கைகளில் ஆழமாக வேரூன்றிய குடும்பத்தில் இருந்து வந்தவர். திரு இளங்கோவன் வகுத்த பதவிகள் பின் வருமாறு: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்1984-ல் சத்தியமங்கலம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.அவரது மகன் திருமகன் ஈவேராவின் அகால மறைவைத் தொடர்ந்து 2023 இல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப...
கனமழை காரணமாக தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்!

கனமழை காரணமாக தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்!

தமிழ்நாடு
கனமழை பதிவாகியுள்ள மாவட்டங்களில் 50 நிவாரண முகாம்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. கடந்த சில நாட்களாக கனமழை பெய்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நிலைமையை ஆய்வு செய்ய ஸ்டாலின் டிசம்பர் 13, 2024 அன்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்றார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13, 2024) மழை தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர். அரியலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் சிவகங்கை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேலும் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். கனமழை பதிவாகியுள்ள மாவட்டங்களில் 50 நிவாரண முகாம்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அரச...
நிரம்பியது பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள்!

நிரம்பியது பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள்!

தமிழ்நாடு
பூண்டி ஏரி!சென்னைக்கு குடிநீரை வழங்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் 34.58 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் முழு உயரம் 35 அடி மற்றும் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போது நீர் இருப்பு 34.05 அடி உயரத்துடன் 2,839 மில்லியன் கன அடியாக பதிவாகியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறக்கப்படும். செம்பரம்பாக்கம் ஏரி!கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், உபரி நீரை வெளியேற்ற இன்று காலை 8 மணிக்கு முதற்கட்டமாக ஆயிரம் கன அடிகள் தண்ணீர் திறக்கப்படும். இதனால் அருக...
மழை காரணமாக 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மழை காரணமாக 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது. இதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கீழ்க்கண்ட 16 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1. சென்னை 2. விழுப்புரம் 3. மயிலாடுதுறை 4. தஞ்சாவூர் 5. புதுக்கோட்டை 6. கடலூர் 7. திண்டுக்கல் 8.  ராமநாதபுரம் 9. காஞ்சிபுரம் 10. திருவாரூர் 11. அரியலூர் 12. செங்கல்பட்டு 13. ராணிப்பேட்டை 14. திருவள்ளூர் 15. திருவண்ணாமலை 16.கரூர்...
கனமழை எச்சரிக்கை; மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கை; மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கையினால், மயிலாடுதுறையில் இன்று (டிசம்பர் 11) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகைக்கு அருகே கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. மாலை நிலவரப்படி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் நகர்வு மெதுவாக இருப்பதால், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் இன்று மிதமான மழை, இடியுடன் பெய்யும் வாய்ப்பு ...