Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

நிரம்பியது பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள்!

பூண்டி ஏரி!
சென்னைக்கு குடிநீரை வழங்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் 34.58 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் முழு உயரம் 35 அடி மற்றும் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போது நீர் இருப்பு 34.05 அடி உயரத்துடன் 2,839 மில்லியன் கன அடியாக பதிவாகியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறக்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரி!
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், உபரி நீரை வெளியேற்ற இன்று காலை 8 மணிக்கு முதற்கட்டமாக ஆயிரம் கன அடிகள் தண்ணீர் திறக்கப்படும். இதனால் அருகிலுள்ள 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.