ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி பேசுவது போன்ற போலி வீடியோ வெளியிட்டு, ஒரு காங்கிரஸ் கட்சி நிர்வாகியை ஏமாற்றி ரூ.33 லட்சம் பறித்துள்ள மோசடி கும்பல். இந்த சம்பவம், ஆன்லைன் மோசடிகளின் புதிய முறைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வாழ் லாரன்ஸ் டொமினிக் சேவியர் (55) என்பவர் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருக்கும் இவர் பேஸ்புக் மூலம் வந்த ஒரு விளம்பரத்தில், "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முகேஷ் அம்பானி ஆதரவில் ஒரு சிறப்பு முதலீட்டு திட்டம்" என்ற போலி AI வீடியோவைப் பார்த்துள்ளார். அந்த வீடியோவில் இணைக்கப்பட்ட லிங்க் மூலம் ஒரு ஆன்லைன் டிரேடிங் தளத்துடன் தொடர்பு கொண்ட அவர், "உயர் லாபம் தரும் முதலீடு" என்று சொல்லி, படிப்படியாக ரூ.33 லட்சம் செலுத்தியுள்ளார். பணம் மீண்டும் திரும்பாததா...









