தமிழக பட்ஜெட் 2025-26: தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. காலை 10:00 மணிக்கு, 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையில் அவர், "இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பல்வேறு முக்கிய ஆலோசனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். எவ்வளவு தடைகள் வந்தாலும், சமநிலையை பேணிச் செயல்படுவோம்" எனக் கூறினார்.
அடுத்த ஆண்டு (2026) சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதனால், புதிய அரசு பதவி ஏற்பதற்கு முன்பு, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பின், முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். எனவே, இந்த பட்ஜெட், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு...









