Tuesday, September 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: மே 27, 2025 அன்று, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் (ஒரிசா கடலோரம் அருகே) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்துக்குள் மேலும் வலுப்பெறும் எனவும், தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலெர்ட்: இடி, மின்னலுடன் கனமழை மே 27 (திங்கள்): தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று வேகம் மணிக்கு 40–50 கிமீ வரை வீச வாய்ப்பு. நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை. தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மிக கனமழை ஏற்படக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய...
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

தமிழ்நாடு
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாதங்கள் வளர்ச்சி அடைந்த குட்டி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானை: மே 17ஆம் தேதி, கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் வழியெறிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்தது. அதன் அருகில், அதற்குச் சொந்தமான குட்டி யானையும் பயமுடனும் பரிதாபமாகவும் நின்றுக்கொண்டிருந்தது. உடனடியாக தகவலறிந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவக் குழு போராடியப் பிறகும் உயிரிழப்பு : யானையின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வ...
தமிழ்நாடு அரசில் 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு.

தமிழ்நாடு அரசில் 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு.

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தகவலின் பேரில், மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள "709 உதவி பொறியாளர்" பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு "மே 27, 2025 முதல் ஜூன் 25, 2025 வரை" ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிட விபரம்: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட 47 வகையான பதவிகளுக்காக 615 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மேலும் 94 பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 709 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் கீழ் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10, 2025 வரை நடைபெறும். தேர்வு கட்டணத்தை UPI வழியாக செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்ல...
மதுரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடக்கும் குவாரி பணிகள் – நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன்!

மதுரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடக்கும் குவாரி பணிகள் – நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன்!

தமிழ்நாடு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியில் அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டவிரோதமாக குவாரிப் பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் 2021ஆம் ஆண்டு வரை சுமார் 60 கிரானைட் குவாரிகள் இயங்கி வந்தன. அதில் ஏராளமான குவாரிகளில் இருந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுதொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் விசாரணை நடத்தி, தமிழக அரசுக்கு ரூ.16 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, பிஆர்பி நிறுவன அதிபர் பழனிசாமி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ம...
மதுரையில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததால் மூன்று பேர் பலி.

மதுரையில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததால் மூன்று பேர் பலி.

தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையங்குளம் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இறந்தவர்கள் அம்மா பிள்ளை (65), அவரது 10 வயது பேரன் வீரமணி மற்றும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் வெங்காட்டி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்தனர். மூவரும் உடனடியாக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வெங்காட்டி உயிரிழந்தார். அம்மா பிள்ளை மற்றும் அவரது பேரன் ...
தமிழகத்தின் வேளாண் முன்னேற்றம்: 4 ஆண்டுகளில் சாதனைகள் பட்டியலிட்டது அரசு

தமிழகத்தின் வேளாண் முன்னேற்றம்: 4 ஆண்டுகளில் சாதனைகள் பட்டியலிட்டது அரசு

தமிழ்நாடு, விவசாயம்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வேளாண் வளர்ச்சி 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாகும். இதைத் தொடர்ந்து, மொத்தம் 5 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, ₹1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2012 முதல் 2021 வரை சராசரியாக 1.36% அளவிலிருந்த வேளாண் வளர்ச்சி, திமுக ஆட்சி தொடங்கிய 2021 முதல் 2024 வரையில் 5.66% ஆக உயர்ந்துள்ளது. இது வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது. முக்கிய பயிர்களின் உற்பத்தி சாதனைகள் முதலிடம்: கேழ்வரகு, கொய்யாஇரண்டாம் இடம்: மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் மூன்றாம் இடம்: வேர்க்கடலை, தென்னை 2020-21 ...
8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

தமிழ்நாடு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்கும் நோக்கில், பா.ஜ.க. அல்லாத 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ள 14 கேள்விகளை எதிர்த்து, ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்காளம், கர்நாடகம், ஹிமாச்சல பிரதேசம், தெலங்கானா, கேரளம், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். கூட்டாட்சி அமைப்பின் முக்கியத்துவம்: மாநிலங்களின் சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க, மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். ஆளுநரின் அதிகார வரம்பு: மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பத...
தமிழகத்தில் வெப்பத்தை தணிக்கும் கோடை மழை – 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் வெப்பத்தை தணிக்கும் கோடை மழை – 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அலர்ட்!

தமிழ்நாடு
தமிழக வானிலை மையம், இன்று (மே 19) மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும், அது மே 21ம் தேதி வாக்கில் அரபிக்கடலில் ஒரு புதிய மேலடுக்கு சுழற்சியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மே 22ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் அது வடக்கு திசையில் நகரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, மணிக்கு 40–50 கிமீ வேகத்தில் வீசும் பலத்த காற்று...
கனிம வளத்துறையில் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம், அதிகாரிகள் மீது நடவடிக்கை.

கனிம வளத்துறையில் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம், அதிகாரிகள் மீது நடவடிக்கை.

தமிழ்நாடு
திருநெல்வேலி மாவட்ட கனிம வளத்துறையில் நடைபெற்ற கோடிக்கணக்கான வருவாய் இழப்பு தொடர்பான புகார்கள் மற்றும் அதற்கடுத்த விசாரணையின் விளைவாக, பல்வேறு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு நிதிக்கு ஏற்பட்ட நஷ்டம் தெரிய வந்ததால், அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், சிலர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டும் உள்ளனர். மாவட்டத்தில் 50க்கும் அதிகமான கல் குவாரிகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இங்கு ஜல்லி மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் கிரஷர் ஆலைகளுக்காக கனிம வளத்துறை நடைச்சீட்டு (Transit pass) வழங்கி வருகிறது. நடைச்சீட்டு ஒன்றுக்கு, அதற்கு சமமான அளவில் மட்டும் கற்கள், ஜல்லி அல்லது எம் சாண்ட் வாகனங்களில் ஏற்றி அனுப்ப அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நடைச்சீட்டின் எண்ணிக்கைக்கு மீறி அனுமதிகள் வழங்கப்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. உதாரணமாக, 100 நடைச்சீட்டுகள் மட்டும் வழ...
மதுரைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரிய அதிகரிப்பு.

மதுரைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரிய அதிகரிப்பு.

தமிழ்நாடு
மதுரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் 2024ஆம் ஆண்டில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. மாவட்ட சுற்றுலா துறையின் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் 57,564 வெளிநாட்டு பயணிகள் வந்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 98,770 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் 2.5 கோடியிலிருந்து 2.74 கோடியாக அதிகரித்துள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருமலை நாயக்கர் மாளிகை ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாக இருக்கின்றன. அதே நேரத்தில், பழங்கால சந்தைகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கீழடி போன்ற தொல்லியல் தளங்களை கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறார்கள். வெளிநாட்டு பயணிகளில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த...