
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தகவலின் பேரில், மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள “709 உதவி பொறியாளர்” பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு “மே 27, 2025 முதல் ஜூன் 25, 2025 வரை” ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விபரம்: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட 47 வகையான பதவிகளுக்காக 615 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மேலும் 94 பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 709 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் கீழ் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10, 2025 வரை நடைபெறும். தேர்வு கட்டணத்தை UPI வழியாக செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்லது எம்.எஸ்.சி. பாடப்பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 21 முதல் 30 வயது. இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு மாற்றம் பெறும் வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பணியிடம் மற்றும் ஊதியம்: 709 பணியிடங்கள் தமிழ்நாடு அரசு கீழ் செயல்படும் வட்டார நீர்வழங்கல், மெட்ரோ அபிவிருத்தி, வேளாண்மை, நெடுஞ்சாலை, மீன்வளம், வனத்துறை, மாசுக் கட்டுப்பாடு, தொழில்துறை, கல்வி ஆராய்ச்சி, சுகாதாரம், மின்சாரம், பொதுப்பணிகள், அறநிலையத்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ளன.
தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை வழங்கப்படும்.
கூடுதல் தகவலுக்கு:
தகுதி, பாடப்பிரிவுகள், தேர்வு முறை, ஆவணங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.