தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு!
பூமியின் அடியில் புதைந்திருந்த தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு – ஆய்வாளர்கள் வியப்பு
புதுக்கோட்டை: தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் மீண்டும் ஒருமுறை உலகைத் தன் பக்கம் திருப்பவகையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பகுதியில் நடந்து வரும் தொல்லியல் அகழாய்வில் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த அகழாய்வில், பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் தங்கம் பதிக்கப்பட்ட குண்டு மணி, மூடப்பட்ட மண் பானைகள், வட்டக்கற்கள் உள்ளிட்ட அரிய வரலாற்று சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியலாளர் குழுவினர் தங்கள் ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்.
இக்கண்டெடுப்புகள் தமிழ் நாகரிகத்தின் தொன்மை மற்றும் வளர்ச்சி குறித்து புதிய விளக்கங்களை அளிக்கின்றன. குறிப்பாக, தங்கம்...









