டிரம்ப் தலைகீழ் மாற்றம், “இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம், நான் தான் செய்தேன் என்று சொல்ல விரும்பவில்லை”.
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு தான் தான் காரணம் என்றதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மே 15) மறுத்துவிட்டார். ஏற்கனவே போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் கூறிய கூற்றுக்களை இந்தியா நிராகரித்தது, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே நடைபெற்றதாகக் கூறியது.
கத்தார் பயணத்தின் போது, அமெரிக்க வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உரையாற்றிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மாற்றினார். "நான் அப்படித் தான் கூறினேன் என்று சொல்ல விரும்பவில்லை, ஆனால் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க நான் உதவினேன்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் வரி பிரச்சினையைக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிகாரிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகம் குறித்துப் பேசியதாகக் கூறினார். ...









