பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் டொனால்ட் டிரம்ப் பேச்சு – இந்தியா, ஈரானுக்கு புதிய அபாயம்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை சந்தித்து முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு அமெரிக்காவில் நடைப்பெற்றது. டிரம்ப் அவருக்கு மதிய உணவை வழங்கியதுடன், இருவரும் பல்வேறு விஷயங்களை நேரடியாக விவாதித்தனர்.
இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் உள்ள ராணுவ மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என டிரம்ப் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலாக, பாகிஸ்தானுக்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், நவீன ஆயுதங்கள், நிதி உதவி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த "டீல்" ஒப்புக்கொள்ளப்பட்டால், அது இந்தியா மற்றும் ஈரான் இருநாடுகளுக்கும் கவலையூட்டும் அபாயங்களை உருவாக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் பக்கம் அமெரிக்கா?பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின...









