தர்மசாலா ஐ.பி.எல். போட்டி ரத்து: வீரர்கள், ஊழியர்களுக்காக சிறப்பு வந்தே பாரத் ரெயில் ஏற்பாடு!
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்று கோடறிந்த கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள், துணை ஊழியர்கள், ஒளிபரப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட 300 பேரை டெல்லி அழைத்து செல்ல சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (மே 8) இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருந்தது. தொடக்கத்தில் ஏற்பட்ட மழை காரணமாக டாஸ் தாமதம் ஆனது. பின்னர் மழை நின்றதும் டாஸ் போடப்பட்டு பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி திடீரென நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், சில ஊடகங்களில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்கள் ஜம...








