
நள்ளிரவில் தீவிரவாத முகாம்களில் குண்டு வீச்சு. இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத தளங்களை ஏவுகணைகளை வீசி அழித்தது:
- மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜே.எம்
- மர்காஸ் தைபா, முரிட்கே – எல்.இ.டி.
- சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜெ.எம்.
- மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – எச்.எம்.
- மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – LeT
- மர்காஸ் அப்பாஸ், கோட்லி – ஜெ.எம்.
- மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி – எச்.எம்
- ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் – LeT
- சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் – ஜே.
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பயிற்சி பெட்ரா முகாம் மீது குண்டு வீசியது இந்தியப் படை. 2019 ல் 40 சி.ஆர்.பி.எப். வீரர்களைக் கொன்ற தீவிரவாதிகள் பயிற்சி முகாம் மீதும் குண்டு வீசியது இந்திய ராணுவம்.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமையகம் உள்ள முரித்கேயில் தாக்குதல். இந்த முரித்கே பகுதி தான் மிக முக்கியமான தீவிரவாத பயிற்சி மையம் ஆகும். ஆண்டுக்கு 1,000 பேரை தேர்வு செய்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. மும்பை தாக்குதலில் பிடிபட்டு பின் தூக்கிலடப்பட்ட அஜ்மல் கசாப் பயிற்சி பெற்ற இடம் இந்த முரித்கே தான். இந்த இடத்தில் விருந்தினர் மாளிகை கட்டுவதற்கு ஒசாமா பின் லேடன் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார். 82 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இங்கே பயிற்சி பெறுவோருக்கு குடியிருப்பு மற்றும் சந்தைகள் உள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் சர்ஜான் தீவிரவாதிகளின் சுரங்கப் பாதை உள்ள இடங்களையும் இந்தியப் படை தாக்கியது. இந்திய எல்லையில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் தான் உள்ளது இந்த தாக்குதலுக்கு உள்ளான சர்ஜால். சர்ஜாலில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக இந்தியப் பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்து வந்தனர். பாகிஸ்தான் உளவுத் துறை இந்த சர்ஜாலில் உள்ள மருத்துவமனைகளை தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களாக பயன்படுத்தி வந்தது.
“இந்த உலகம் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது.” – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.