Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

இந்தியா ஒன்பது பயங்கரவாத தளங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு, ஐந்து இந்திய ஜெட் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. இப்போது இந்தக் கூற்றுக்களை ஆதரிக்க, பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் சமூக ஊடகப் பதிவுகளை ஆதாரமாகக் காட்டுகிறார்.

இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக கூறியதை உறுதிப்படுத்த ஆதாரம் உள்ளதா என்று பத்திரிகையாளர் கேட்டார். அப்போதுதான் அவர், “இது சமூக ஊடகங்கள் முழுவதும் பரவி வருகிறது” என்று கூறியிருக்கார்.

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்தத் தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஏற்பாடு செய்தது.

புதன்கிழமை (மே 7) ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் தங்கள் மண்ணில் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாட்டைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வான்வழித் தாக்குதல் ஒரு கட்டாயம் என்று கூறினார்.

“ஏப்ரல் 22 தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மற்றும் திட்டமிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகக் கருதப்பட்டது. தாக்குதல்கள் நடந்து பதினைந்து நாட்கள் கடந்தும், பாகிஸ்தானிடமிருந்து அதன் பிரதேசத்திலோ அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திலோ உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

“மாறாக, அது மறுப்புகளையும் குற்றச்சாட்டுகளையும் மட்டுமே செய்துள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளை நாங்கள் கண்காணித்ததில், இந்தியாவிற்கு எதிரான மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதைக் காட்டியது. எனவே, முன்கூட்டியே தடுக்கவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று மிஸ்ரி மேலும் கூறினார்.