கரூர் கூட்ட நெரிசல் விசாரணை :ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து ஆய்வு.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக காரணங்களை கண்டறிந்து, குற்றப்பொறுப்பை நிர்ணயிக்க தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
இந்த ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை பணிகள் நேற்று (செப். 28) தொடங்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் அவர் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று மாலை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு நேரில் சென்று சூழ்நிலையை ஆராய்ந்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் நேரடி கேள்விகள் எழுப்பி, சம்பவம் நடந்த விதம் குறித்த முக்கிய தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல...









