பொங்கல் பண்டிகை கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழர்களின் முக்கிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை, இந்த ஆண்டு தமிழகம் வந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக (பா.ஜ.,) தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து, பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 15-ல் பொங்கல், அதற்கு முன் மோடி வருகை:தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி ஜனவரி 10 அல்லது 12 தேதிகளில் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருகையின் போது, அவர் தமிழக பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாக கலந்து கொண்டு, பொங்கல் விழாவை கொண்டாட உள்ளார்.
கொங்கு மண்டலத்தில் பொங்கல் விழா:தகவல்களின்படி, பொங்கல் கொண்டாட்டம் திருப்பூர் அல்லது ஈரோடு போன்ற கொங்கு மண்டல...









