Tuesday, September 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் வானியல் அரிய நிகழ்வு!

நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் வானியல் அரிய நிகழ்வு!

தமிழ்நாடு
நாளை (7ம் தேதி) இரவு, இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் அரிய வானியல் நிகழ்வாக முழு சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது. இது சுமார் 85 நிமிடங்கள் நீடிக்கும் என வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். எப்போது, எப்படிப் பார்க்கலாம்? இரவு 8:58 மணி – சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். (இதனை வெறும் கண்களால் பார்க்க சிரமமாக இருக்கும்).இரவு 9:57 மணி – பகுதி கிரஹணம் துவங்கும். அப்போது, சந்திரன் பூமியின் கருநிழல் பகுதிக்குள் நுழையத் தொடங்கும். இதிலிருந்து கிரஹணத்தை எளிதாகக் காணலாம்.இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:33 மணி வரை – சந்திரன் முழுமையாக மறைந்து காணப்படும். இதுவே முழு சந்திர கிரஹணம்.அதிகாலை 1:26 மணி – சந்திரன் கருநிழல் பகுதிக்குள் இருந்து வெளியேறும்.அதிகாலை 2:25 மணி – புறநிழல் பகுதிக்குள் இருந்தும் முழுமையாக வெளியேறும். இத்தகைய நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களாலேயே பார்...
பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல் : தமிழக அரசியலில் பரபரப்பு!

பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல் : தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழ்நாடு
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவுக்கு எதிராக அதிமுக–பாஜக தலைமையில் மாநிலத்தில் மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அந்த முயற்சிகளில் அமமுகவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தது. எனினும், சமீபகாலமாக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன. இந்நிலையில், அதிமுக உரிமை மீட்பு குழுவை தலைமை தாங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), சில நாட்களுக்கு முன்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் கவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, இன்று டிடிவி தினகரனும் அதிகாரப்பூர்வமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு, வரவிருக்கும் த...
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 2 நாள் தமிழ்நாடு பயணம்!

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 2 நாள் தமிழ்நாடு பயணம்!

தமிழ்நாடு
இந்தியா ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்தார். நேற்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இன்று ஜனாதிபதி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு பயணம் செய்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதையடுத்து, ஜனாதிபதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். பின்னர் திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நகரில் டி...
தமிழக முதல்வரின் ஜெர்மன் முதலீட்டு பயணத்தின் வலுவான குறிப்பு!

தமிழக முதல்வரின் ஜெர்மன் முதலீட்டு பயணத்தின் வலுவான குறிப்பு!

தமிழ்நாடு
ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், தொழில்களில் முதலீடு செய்து, தங்கள் சொந்த கிராமங்களில் கல்வியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தார். ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் தமிழ்நாட்டிற்கு செயல்பாடுகளை விரிவுபடுத்த முடியும் என்றாலும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் தங்கள் நிறுவனங்களை மாநிலத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க முடியும் என்று கூறினார். “உங்கள் சொந்த கிராமங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் கல்வி உதவியை முடிந்தவரை வழங்குங்கள்,” என்று அவர் கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர் மற்றும் அமெர...
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு(TET) கட்டாயம்!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு(TET) கட்டாயம்!

தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு:மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் (RTE Act, 2009) படி, 1 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய விரும்புவோர் தகுதித்தேர்வு (TET) எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆசிரியர் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் சங்கம் கண்டனம்:தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்:கல்வி உரிமைச் சட்டத்தில் இல்லாத பிரிவை உச்சநீதிமன்றம் தனது 142-வது ...
மேட்டூர் அணை – இந்த ஆண்டில் 6வது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை – இந்த ஆண்டில் 6வது முறையாக நிரம்பியது!

தமிழ்நாடு
சேலம் மாவட்டத்தில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். தமிழக விவசாயத்திற்கு உயிர் ஊற்றாக திகழும் இந்த அணை, நடப்பாண்டில் ஆறாவது முறையாக நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். சமீப நாட்களில் தமிழக – கர்நாடகா எல்லை மலைப்பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியது. இதன் விளைவாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இன்று காலை 6வது முறையாக மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவையும் எட்டியது. அணைக்கு வரும் நீர்வரத்து 31,854 கனஅடியில் இருந்து 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் சேமிக்கப்பட்ட நீர் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், 23,300 கனஅடி நீர் டெல்டா பாசனப்பகுதி மற்றும் கால்வாய்களில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பிய நிலையில், தா...
வணிக காஸ் சிலிண்டர் விலை குறைப்பு.

வணிக காஸ் சிலிண்டர் விலை குறைப்பு.

தமிழ்நாடு
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் பேரில், தற்போது 19 கிலோ எடையுடைய ஒரு சிலிண்டர் ரூ.1,738க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எனும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ மற்றும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலான சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 1) முதல் வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ரூ.24, ஜூலை மாதம் ரூ.58.50, ஆகஸ்ட் மாதம் ரூ.33.50 என தொடர்ந்து வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டுக்கான காஸ்...
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.

தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.

தமிழ்நாடு
தமிழகத்தில் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் நோக்கில், மின் வாரியத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. கோடைகால தேவைக்கு முன்னேற்பாடு:தமிழகத்தில் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடைகால வெப்பம் அதிகரிக்கும். அந்த காலகட்டத்தில் ஏர் கண்டிஷனர், பம்ப் செட், தொழிற்சாலைகள் மற்றும் பிற உபயோகங்களால் மின்சார தேவை பல மடங்கு உயரும். குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த வித தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 2026 பிப்ரவரி 1 முதல் மே 15 வரை தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க மின் வாரியம் முன்வைத்த மனுவை ஆணையம் பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் அனுமதிக்கப்பட்...
சென்னையில் நள்ளிரவு கனமழை!

சென்னையில் நள்ளிரவு கனமழை!

தமிழ்நாடு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. திடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை தாக்கம் அதிகம் பெற்ற பகுதிகள்:மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகளில் மழை பலத்த அளவில் பெய்தது. மணலி, லிம்கா நகர் பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளமாக ஓடியதால், இரவு நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரில் சிக்கி சிரமப்பட்டதுடன், பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மழை பதிவுகள்: சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி: மணலி பகுதியில் 27 செ.மீ. லிம்கோ நகர் 26 செ.மீ. கொரட்டூர் 18 செ.மீ. கத்தியவாக்கம் 14 செ.மீ. திருவொற்றியூர் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் மழை நிலை:...
இன்ஜினியரிங் கல்லூரிகளின் புதிய பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழி ஒன்று கற்றல் கட்டாயம்!

இன்ஜினியரிங் கல்லூரிகளின் புதிய பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழி ஒன்று கற்றல் கட்டாயம்!

தமிழ்நாடு
Chennai: Police personnel stand guard at the entrance of Anna University after the alleged sexual assault of its girl student, in Chennai, Thursday, Dec. 26, 2024. (PTI Photo) (PTI12_26_2024_000412B) தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளில் ஒன்றை கூடுதலாக கற்க வேண்டும் என்ற கட்டாயமும் சேர்க்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம்:அண்ணா பல்கலைக்கழகம், கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் உலகளாவிய சூழலுக்கு ஏற்ப முன்னேறவும், இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. இதற்காக கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தீவி...