காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சென்னையில் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார்.
ஈரோடு மாவட்டத்தில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ஈ.வெ.க.சம்பத், சமூக சீர்திருத்தவாதி ஈ.வெ.ரா. பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் மகன் ஆவார். இளங்கோவன் திராவிட இயக்கம் மற்றும் முற்போக்கான கொள்கைகளில் ஆழமாக வேரூன்றிய குடும்பத்தில் இருந்து வந்தவர். திரு இளங்கோவன் வகுத்த பதவிகள் பின் வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்1984-ல் சத்தியமங்கலம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.அவரது மகன் திருமகன் ஈவேராவின் அகால மறைவைத் தொடர்ந்து 2023 இல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற உறுப...









