மேற்கு ஆசிய நெருக்கடி குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவை உறுதி அளித்தன
மேற்கு ஆசிய நிலைமை குறித்து, புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஐக்கிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, ராஜீவ் ரஞ்சன் (லலன்) சிங் மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு. ரிஜிஜு, பங்கேற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களால் எழுப்பப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் அரசு பதிலளித்ததாகவும் அவர் கூறினார். இந்த நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும...









