
ஆஸ்திரியாவின் ஃபெடரல் சான்சலர் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர், இந்தியாவுக்கான தனது நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் ரக்ஷா காட்சே அவரை வரவேற்றார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவும் ஆஸ்திரியாவும் ஒரு நெருக்கமான மற்றும் நட்புரீதியான உறவைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்தார். சான்சலர் ஸ்டாக்கரின் இந்தப் பயணம், இந்தியா-ஆஸ்திரியா இடையிலான மேம்பட்ட கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
