டில்லியில் கனமழை, 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!
டில்லியில் கனமழை, இடி மின்னலுடன் பெய்து வருகிறது . நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், துவர்கா பகுதியில் மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் உயிரிழந்தது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக டில்லியின் முக்கிய சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் தேங்கி, சாலைகள் குளம்போல மாறியுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக நகரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் புழுதி காற்றும் அதிவேகத்தில் வீசியதால் விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 120க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக நேரம் மாறியுள்ளதுடன், சில விமானங்கள் பாதுகாப்புக்காக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், ...









