
“மே தினம்” தொழிலாளர் தினம், முதல் முதலில் இந்தியாவில் 1 மே 1923 உயர் நீதிமன்றக் கடற்கரையிலும், அதன்பிறகு அவர் வாழ்ந்த வீடான லேடி வெலிங்டன் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது. (லேபர் கிஸான்)”விவசாயத் தொழிலாளர் கட்சியையும் ” தோற்றுவித்து அன்றே “லேபர் கிஸான் கெசட்” ஆங்கில நாளேட்டையும், “தொழிலாளி “தமிழ் பத்திரிகையையும், “புது உலகம்” தமிழ் மாத இதழையும் ஆரம்பித்து வைத்தார்.
“1920 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேயே நிலப் பிரபுத்துவம், சாதியம், வகுப்புவாதம், ஏகாதிபத்தியும், முதலாளித்துவம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடும் வீரராகவே ம.வெ. சிங்காரவேலர் திகழ்ந்தார்.’’ – மித்ரோசின், ரஷ்ய நாட்டு வரலாற்று ஆசிரியர்
‘‘போர்க்குணம் மிகுந்த செயல் முன்னோடி.
பொதுவுடைமைக்கு ஏகுக அவர் பின்னாடி.’’
“நல்லறிவும் பெருநோக்கும் கேட்பீராயின்
நம் தோழன் சிங்காரவேலன் கண்ட வெல்லு தமிழ்ப் புது உலகம்
எனும் மாத வெளியீட்டை வாசித்தல் வேண்டும் என்போம்.”
“பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய் புரட்டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக் கனா முளைத்ததும் அவனால் “ – பாரதிதாசன்
‘‘சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் இறந்துவிட்டார். இலட்சியமே மூச்சாகக் கொண்டிருந்த வீரர்
மறைந்துவிட்டார். இந்திய உபகண்டத்தின் முதல் பொதுவுடைமைவாதி காலமானார். அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது 84. அவருடைய இரண்டு அடிப்படை இலட்சியங்களாகிய சுயமரியாதை, சமதர்மம் என்பவை ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்ட பிறகே, அவரின் கண்கள் மூடின.
‘‘சிங்காரவேலர் மறைக்கப்பட்ட மாமேதை” – பேரறிஞர் அண்ணா.
இவர் வாழ்ந்த வாழ்க்கையும், இதனைப் படித்ததும், சிந்தித்ததும், உழைத்ததும் சீருடன் வாழ்ந்ததும் பலராலும் போற்றிப் புகழப்பட்டதை நினைவு கூர்வோம்!
“இந்தியத் தொழிலாளர்களின் தந்தை ம.வெ.சிங்காரவேலர் – எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பொ. வசந்தகுமாரன்