5 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்!
கடந்த 19ம் தேதி, பஞ்சாபின் லுாதியானா மேற்கு, கேரளாவின் நிலம்பூர், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச், குஜராத்தின் விசாவதர், காடி ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நிலம்பூர் இடைத்தேர்தல் பிரியங்கா பிரதிநிதித்துவப்படுத்தும் வயநாடு லோக்சபா தொகுதியின் ஒரு பகுதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆர்யாதன் சவுகத், ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வேட்பாளர் எம்.ஸ்வராஜை, 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
லுாதியானா மேற்கு தொகுதியில், ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக இருந்த க...









