குஜராத் விமான விபத்தில் பலியான 120 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.
குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான 'ஏர் இந்தியா' துயர சம்பவத்தில், தற்போது வரை 162 உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.
விபத்து நேரத்தில் விமானம் தீப்பற்றிக் கொண்டதால், பலர் தீயில் எரிந்து உடல் உருக்குலைந்தனர். பலர் அடையாளம் தெரியாத நிலையிலும் இருந்தனர். இதனால், இறந்தவர்களின் உடல்களை உறுதிப்படுத்த டி.என்.ஏ. சோதனை (மரபணு பரிசோதனை) மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து ஆமதாபாத் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:"நேற்று காலை வரை நடைபெற்ற டி.என்.ஏ சோதனையின் மூலம் 162 உடல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 120 உடல்கள் குஜராத், மஹாராஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான் மற்றும் டையு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த 120 உடல்களில் ஐந்து பேர்,...









