அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஏ.ஐ. பயிற்சி
தொழில்நுட்ப வளர்ச்சியின் புது பரிமாணமான செயற்கை நுண்ணறிவு (AI) நுட்பங்களை அரசு நிர்வாகத்தில் பின்பற்றும் வகையில், ஒடிஷா அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. மாநில அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும், இனிமேல் மூன்று மாதங்கள் ஆன்லைன் ஏ.ஐ. பயிற்சியை கட்டாயமாக மேற்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம்,முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பாஜக அரசின் ஒரு முன்னேற்றமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. புதிய தலைமுறையின் பணியாளர்களுக்கு தேவையான டிஜிட்டல் திறன்களை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கம்.
இத்திட்டத்தை அறிவித்து, ஒடிஷா உள்துறைச் செயலர் மனோஜ் அஹுஜா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ கடிதத்தில், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தங்கள் கீழ் உள்ள பணியாளர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அவர் மேலு...









