டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்!
ஜனவரி 2025 இல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) தெரிவித்துள்ளது.
“குடியேற்றப் பிரச்சினைகளில், சட்டவிரோத நிலையில் உள்ள அல்லது சட்டவிரோதமாக பயணம் செய்யும் இந்திய நாட்டினரை நாடு கடத்துவதில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது; அவர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்தவுடன் அவர்களை நாங்கள் திரும்ப அழைத்துக் கொள்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர விளக்கக் கூட்டத்தில் கூறினார்.
“2025 ஜனவரி முதல், அமெரிக்காவிலிருந்து சுமார் 1080 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில், சுமார் 62 சதவீதம் பேர் வணிக விமானங்களில் வந்துள்ளனர்.”
மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விசா விண்ண...









