இந்தியப் பெருங்கடலில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் 20 ஆண்டுகள்!
டிசம்பர் 26, 2004 அன்று மெரினா கடற்கரையின் வான்வழி காட்சி. (Reuters / File Photo)
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 26, 2004 அன்று, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுனாமியை தூண்டி 12 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 230,000 மக்களைக் கொன்று தீர்த்தது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் மட்டும் 1,70,000 பேர் உயிரிழந்தனர். சுனாமி தாய்லாந்தில் 8,000 க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைக் கொன்றது. இது நாட்டின் வரலாற்றில் ஒரு ஆழமான வடுவை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 400 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை மற்றும் உரிமை கோரப்படாமல் இருந்தன.
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் இந்தோனேசியா (131,028 பேர் கொல்லப்பட்டனர்), இலங்கை (31,229)...









