Thursday, April 30பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

Author: daya.anand.s

பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவிப்பு!

பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவிப்பு!

தமிழ்நாடு
"பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" - சென்னை பத்திரிகையாளர் மன்றம். சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவரும் 17.12.2024 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கைகளில் ஒன்றான, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இன்று மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது ஏற்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியின் போது உயிரிழக்கும் பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இதுவரை 5 லட்சம் ருபாய் குடும்ப நல நிதியாக வழங்குபட்டு வந்ததை ரூ 10...
மும்பை படகு விபத்து: 13 பேரின் பரிதாப மரணம்!

மும்பை படகு விபத்து: 13 பேரின் பரிதாப மரணம்!

பாரதம்
மும்பை படகு சோகம்: பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை, குறைந்தது 13 பேரின் பரிதாப மரணம்! மும்பை கடற்கரையில் புதன்கிழமை (டிசம்பர் 18) விபத்துக்குள்ளான தனியார் படகில் பயணித்த பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை, இது குறைந்தது 13 பேரின் சோகமான மரணத்திற்கு வழிவகுத்தது. எலிபெண்டா தீவை நோக்கிச் சென்ற படகு, கேட்வே ஆஃப் இந்தியா அருகே இந்திய கடற்படையின் வேகப் படகுடன் மோதியதாக கூறப்படுகிறது. மோதல் நடந்த உடனேயே, உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 115 பேரை மீட்டனர். “படகில் இருந்த யாருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்கப்படவில்லை. மோதலுக்குப் பிறகு, நாங்கள் பலரை தண்ணீரில் இருந்து வெளியே இழுத்து படகில் ஏற்றினோம். சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு, கடற்படை எங்களைக் காப்பாற்றியது, ஆனால் அதற்குள் பலர் இறந்து விட்டனர்” என்று பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர...
சைபர் அடிமைகளாக இருக்கும் தமிழர்கள்: சிறப்பு அறிக்கை!

சைபர் அடிமைகளாக இருக்கும் தமிழர்கள்: சிறப்பு அறிக்கை!

பாரதம்
தென் தமிழகத்தில் கணினி துறையில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்று வேலை செய்வதையே விரும்புகின்றனர். இவர்களை குறி வைத்து தூக்கும் கம்போடியா மற்றும் லாவோஸ் நாட்டில் உள்ள இணைய குற்றவாளி கும்பல். கணினி வேலை, கை நிறைய சம்பளம் என்று கூறி பல இளைஞர்களை கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் சென்று ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமைகளாக மாற்றி வருகின்றனர். வங்கி அதிகாரிகள் போல எப்படி பேச வேண்டும்; பங்கு சந்தை முதலீடுகளை ஈர்ப்பது போல, வாட்ஸாப்பில் எப்படி தகவல் அனுப்ப வேண்டும்; சிக்கிய நபர்களை சிந்திக்க விடாமல் எப்படி மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர். பாஸ்ப்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு பணி அமர்த்தப்படும் இந்த இளைஞர்கள் வேலை செய்ய மறுத்தால் பட்டினி போட்டும், உடலில் மின்சாரம் பாய செய்தும் சித்ரவதை ச...
இடி, மின்னலுடன் கூடிய மழை!

இடி, மின்னலுடன் கூடிய மழை!

தமிழ்நாடு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகுந்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இதன் விளைவாக மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டுகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நகர்ந்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (19.12.2024) வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதிகளை நோக்கிச் செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (18.12.2024) வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகி...
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு (Chennai Press Club)  புதிதாக தேர்வாகியுள்ள நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு (Chennai Press Club) புதிதாக தேர்வாகியுள்ள நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு
1972ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கடைசியாக 1999ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், நீண்ட காலமாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால், மறைந்த எம்.யூ.ஜே மோகன் உள்ளிட்ட சிலர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. 25 ஆண்டுகளுக்கு பின்னர், பதிவுத்துறை சட்டத்தின் கீழ் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில் நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி மோதிய நிலையில், மொத்த 1,502 வாக்குகளில் 1,371 வாக்குகள் பதிவாகின. அதில், நீதிக்கான கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. சுரேஷ் வேதநாயகம் தலைவராகவும், அசிப் பொதுச் செயலாளராகவும், மணிகண்டன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், இணைச் செயலாளர...
விருதுநகர் பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம். விவசாயிகள் கவலை!

விருதுநகர் பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம். விவசாயிகள் கவலை!

தமிழ்நாடு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமங்களில் வெள்ள நீர் பயிர்களை அடித்து சென்றது. வெங்காயம், மிளகாய், சோளம், மல்லி போன்ற பயிர்கள் நாசமாகின. இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், கடனை கட்டுவதே கடினம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்....
பிரியங்கா காந்தி ‘பாலஸ்தீனம்’ பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்தில் எடுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

பிரியங்கா காந்தி ‘பாலஸ்தீனம்’ பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்தில் எடுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

பாரதம்
திங்கள்கிழமை (டிசம்பர் 16) பாலஸ்தீனியர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், "பாலஸ்தீனம்" என்று பொறிக்கப்பட்ட பையை நாடாளுமன்றத்திற்குள் ஏந்திச் சென்றார் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி. காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி, பாலஸ்தீனியர்களுடன் தனது ஆதரவை காட்டி வருகிறார் எம்பி பிரியங்கா காந்தி. "பாலஸ்தீனம்" என்ற வாசகமும், தர்பூசணி பொறிக்கப்பட்ட பாலஸ்தீனிய சின்னங்களும் அடங்கிய கைப்பையை காந்தி கையில் வைத்திருந்தார். பாலஸ்தீன ஒற்றுமையின் அடையாளமாக தர்பூசணி பார்க்கப்படுகிறது....
மூட நம்பிக்ககையால் உயிருள்ள கோழி குஞ்சை விழுங்கிய 35 வயதுடைய ஆண் உயிரிழப்பு ; பறவை உயிருடன் மீட்கப்பட்டது.

மூட நம்பிக்ககையால் உயிருள்ள கோழி குஞ்சை விழுங்கிய 35 வயதுடைய ஆண் உயிரிழப்பு ; பறவை உயிருடன் மீட்கப்பட்டது.

பாரதம்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், 35 வயதுடைய நபர் ஒருவர் உயிருள்ள கோழி குஞ்சு ஒன்றை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவை, விந்தையாக, உயிர் பிழைத்தது. அம்பிகாபூரில் நடந்த சம்பவம் உள்ளூர் சமூகத்தையும் மருத்துவ நிபுணர்களையும் திகைக்க வைத்தது, கிராமவாசிகள் இந்த வினோதமான செயலுக்கு மூடநம்பிக்கைகள் காரணம் என்று கூறினர். ஆனந்த் என்ற அந்த நபர் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் குழந்தை பிறப்பதற்காக உள்ளூர் 'தந்திரி'யுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், உயிருள்ள குஞ்சுகளை விழுங்குவது ஒரு தந்தையாக வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சடங்கின் ஒரு பகுதியாகும் என்றும் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையின் போது, ​​ஆனந்தின் உடலில் குஞ்சு உயிருடன் இருப்பதை டாக்...
பிச்சைக்காரர்களுக்கு காசு தந்தால் சிறை தண்டனை!

பிச்சைக்காரர்களுக்கு காசு தந்தால் சிறை தண்டனை!

பாரதம்
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில், ஜனவரி 1, 2025 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுப்பவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று டிசம்பர் 16 திங்கட்கிழமை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் . “பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை நகரத்தில் நடைபெறும். ஜனவரி 1ம் தேதி முதல் பிச்சை கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும்,'' என்றார். பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுக்க வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை சிங் வலியுறுத்தினார், "இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் ப...
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார்!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார்!

பாரதம்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் முதலாவது சர்வதேச பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திங்கட்கிழமை டெல்லியில் சந்தித்தார். புதுடெல்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இலங்கை அதிபர் திசாநாயக்க கூறியதாவது: "எங்கள் நிலத்தை எந்த வகையிலும் இந்தியாவின் நலனுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன்". புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திஸாநாயக்க, “இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக மேலோங்கி செழிக்கும், இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்றார்....