மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை மாநிலங்களவை உறுதி செய்தது!
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதை உறுதிப்படுத்தும் சட்டப்பூர்வ தீர்மானத்தை இன்று அதிகாலை மாநிலங்களவை நிறைவேற்றியது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு ஆதரவளித்தனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் வன்முறையைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தவறியதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்த போதிலும், மாநிலத்தில் இயல்புநிலையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தனது கொள்கை அல்ல என்றும் அரசாங்கம் கூறியது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் இடையே விரைவில் ஒரு சந்திப்பு தேசிய தலைநகரில் நடைபெற வாய்ப்புள்ளது என்றார். சபை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மணிப்பூரில் இரண்டு சமூகத்தினருக...









