இந்தியாவை பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மிரட்டுகிறார்!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் புது தில்லியின் முடிவு குறித்து பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) இந்தியாவை கடுமையாக சாடினார். இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் நடவடிக்கை 250 மில்லியன் மக்களின் பட்டினிக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
சிந்து நதியில் எதிர்காலத்தில் கட்டப்படும் எந்த இந்திய அணைகளையும் குறிவைத்து தாக்குவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். அமெரிக்க பயணத்தில் இருக்கும் முனீர், பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை என்றும், இந்தியா நதியில் கட்ட முடிவு செய்யும் எந்த அணைகளையும் அழித்து விடுவோம் என்றும் எச்சரித்தார். "நாம் அழிகிறோம் என்று நினைத்தால், பாதி உலகத்தையே எங்களுடன் சேர்த்து அழிப்போம்" என்று கூறி, இந்தியாவிற்கும் உலகிற்கும் எதிராக அணு ஆயுத அச்சுறுத்தலைக் கூட விடுத்தார்.
டம்பாவில்...









