காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான பிணைப்பு குறித்து குடியரசு துணைத் தலைவர் பேச்சு!
காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பிணைப்பு வெறும் வரலாற்றுப் பிணைப்பு மட்டுமல்ல, அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஒன்றிணைத்துள்ள ஒரு ஆழமான நாகரிக மற்றும் ஆன்மீகத் தொடர்ச்சி என்று துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இத்தகைய பரிமாற்றங்கள் இந்தியாவின் பகிரப்பட்ட பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஆழப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை மேற்கோள் காட்டிப் பேசிய துணை குடியரசுத் தலைவர், காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு ஒன்றுபட்ட, ஒருங்கிணைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா குறித்த கவிஞரின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் இலக்கு சார்ந...









