பந்தய வழக்கில் ரூ. 7.93 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு இயக்குநரகம் (ED), கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா, நடிகர்கள் ஊர்வசி ரவுடேலா, சோனு சூட், மிமி சக்ரவர்த்தி, அங்குஷ் ஹஸ்ரா மற்றும் நேஹா சர்மா ஆகியோருக்குச் சொந்தமான 7.93 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோத வெளிநாட்டு பந்தயத் தளத்தை இயக்கியவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பந்தயத் தளமும் அதன் துணை நிறுவனமும் இந்தியா முழுவதும் சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரபலங்கள் இந்த பந்தயத் தளத்தை அதன் துணை நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களுடன் தெரிந்தே விளம்பர...









