பிரதமருடன் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சந்திப்பு – உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் – வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்!
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நேற்று புதுதில்லியில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரைச் சந்தித்தார்.
ஒரு சமூக ஊடகப் பதிவில், இந்த இரு தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று டாக்டர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணமாக நேற்று புதுதில்லி வந்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வர்த்தகம் மற்றும் தொழில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார். திரு. கோஸ்டா மற்றும் திருமதி லேயன் ஆகியோருக்கு விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை மற்றும் சம...









