மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து இலங்கை அதிபர் திஸ்ஸநாயகே மற்றும் டிரம்ப்புடன் பிரதமர் மோடி ஆலோசனை.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றார். ஒரு சமூக ஊடகப் பதிவில், திரு. மோடி அவர்கள், தங்கள் உரையாடலின் போது மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து இருதரப்பினரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணை திறந்த நிலையிலும், பாதுகாப்பாகவும், அணுகக்கூடிய வகையிலும் இருப்பதை உறுதி செய்வது உலகம் முழுவதற்கும் இன்றியமையாதது என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, பதற்றத்தைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிப்பதாகத் தெரிவித்தார். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய முயற்சிகள் தொடர்பாகத் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை அதிபர் அனுர குமார திஸ்ஸநாயக்காவுடனும் ஒரு தொலைபேசி உரையாடலை மேற்...









