நாடு இன்று 77வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது.
நாடு இன்று தனது 77வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புது தில்லியில் இந்த கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.
குடியரசு தின அணிவகுப்பு காலை 10:30 மணிக்குத் தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும். குடியரசு தின அணிவகுப்பு, இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் இராணுவ வலிமையின் ஒரு தனித்துவமான கலவையாக இருக்கும்.
இந்த ஆண்டின் கருப்பொருள் ‘சுதந்திரத்தின் மந்திரம்: வந்தே மாதரம்’ மற்றும் ‘வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா’ என்பதாகும். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதோடு குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாதைக்கு வருகை தருவார். அப்போது, முப்படைகள், துணை ராணுவப் படைகள், துணை சிவில் படைகள், என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு மரியாதை...









