இந்தியாவின் முதல் செங்குத்துத் தூக்கு ரயில் பாலம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தார். புனித ராம நவமி நாளில், இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்படும் புதிய பாம்பன் ரயில் பாலம் இன்று மதியம் 1 மணியளவில், பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) இடையிலான புதிய ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், சாலை பாலத்தின் மேல் நின்று, ஒரே நேரத்தில் ஒரு ரயிலுக்கும், ஒரு கப்பலுக்கும் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின், அவர் செங்குத்துத் தூக்கு பாலத்தில் போக்குவரத்து செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கலந்து கொண்டார்.
இந்தியாவின் முதல் செங்குத்து...









