Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

‘இந்தியா உலகை முந்திச் செல்கிறது’: பாராட்டுகிறார் ஓபன்ஏஐ(OpenAI) CEO சாம் ஆல்ட்மேன்.

புதன்கிழமை (ஏப்ரல் 2) ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேன், இந்தியா செயற்கை நுண்ணறிவை (AI) எடுத்துக்கொண்ட விதத்தை பாராட்டினார், “இந்திய நாடு உலகத்தை விட முன்னேறி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

“இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் இப்போது நடப்பதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த படைப்பாற்றலின் வெளிப்பாடுகளை காண நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் – இந்தியா உலகை விட முன்னேறி வருகிறது,” என்று ஓபன்ஏஐ தலைவர் எக்ஸ் இல் பதிவிட்டார்.

இந்த வாரம், OpenAI இன் ChatGPT தளத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை அவர் அறிவித்தார், அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடிய புதிய பட உருவாக்க அம்சத்தை அறிமுகப்படுத்தினார். பயனர்கள் தங்கள் புகைப்படங்களை அற்புதமான ஸ்டுடியோ கிப்லியால் (Ghibli) படைப்புகளாக மாற்ற அனுமதிக்கும் இந்த அம்சம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில், ஆல்ட்மேன், இந்தியாவை AIக்கு மட்டுமல்ல, OpenAIக்கும் முக்கியமான சந்தையாகக் குறிப்பிட்டிருந்தார். புது தில்லியில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட ஆல்ட்மேன், இந்தியா அவர்களின் நிறுவனத்திற்கு இரண்டாவது பெரிய சந்தை என்றும், கடந்த ஆண்டில் Open AI பயனர்கள் இங்கு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

“இது எங்கள் இரண்டாவது பெரிய சந்தை. கடந்த ஆண்டை விட இப்போது இங்கு மூன்று மடங்காக பயனர்கள் உள்ளனர், ஆனால் பெரும்பாலும் இந்தியாவில் மக்கள் ஸ்டாக்ஸ், சிப்ஸ், மாடல்கள், இன்னும் பல முக்கிய விடயங்களுக்கும் ChatGPT AI ஐ பயன்படுத்துகிறார்கள். இந்தியா இன்னும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். AI புரட்சியின் தலைவர்களில் இந்தியாவும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.