நேபாளத்திற்கு இந்தியாவின் 10 டன் நிவாரண பொருட்களுடன் மூன்றாவது விமானம்!
திடீர் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, 320 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை அல்லது அவர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிற நாடுகளின் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 100 பேரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணிபுரிந்த 63 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். சீனப் பகுதியில் சிக்கியிருந்த மேலும் 96 இந்தியர்கள் தரைவழியாகப் பாதுகாப்பாக நேபாளத்திற்குள் வந்துள்ளதாகவும், அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து நேற்று காத்மாண்டு வந்தடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்...









