கனோலா விதைகளை ஏற்றிச் சென்ற இந்தியாவின் முதல் வணிக சரக்கு ரயில் நேபாளத்தை அடைந்தது!
எல்லை தாண்டிய ரயில் வழி சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், இந்தியாவின் முதல் நேரடி வணிக கன்டெய்னர் சரக்கு ரயில் நேபாளத்தை அடைந்துள்ளது.
திருத்தப்பட்ட இந்தியா-நேபாள ரயில் போக்குவரத்து நெறிமுறையின் கீழ், கனோலா சரக்கை ஏற்றிச் சென்ற 40 வேகன்களைக் கொண்ட இந்த ரயில் தனது பயணத்தை நிறைவு செய்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான செயல்பாட்டின் மூலம், கொல்கத்தா துறைமுகத்திலிருந்து விராட்நகருக்கு எல்லைப் பகுதியில் சரக்குகளை வேறு வாகனத்திற்கு மாற்றும் (transshipment) அவசியம் இல்லாமலேயே, கன்டெய்னர் சரக்குகளை நேரடியாக ரயிலில் கொண்டு செல்ல முடிகிறது.
இந்த புதிய ஏற்பாடு பயண நேரம், சரக்குக் கையாளுதல் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதோடு, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகத்தின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் போட்ட...









