
ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரின் சொத்துக்களை முடக்க ஐ.ஜி. உத்தரவு.
தமிழ்நாட்டில் ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தரும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அவர்களின் சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட உள்ளன. இந்த உத்தரவை மண்டல அளவிலான காவல் கண்காணிப்பு உயரதிகாரிகள் (ஐ.ஜி.க்கள்) அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் (எஸ்.பி.க்கள்) வழங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, 'ஏ பிளஸ்', 'ஏ', 'பி', 'சி' என வகைப்படுத்தப்பட்டு, மொத்தம் 27,666 ரவுடிகள் பட்டியலில் இருந்தனர். ஆனால், ஆய்வின் போது சிலர் மரணம் அடைந்திருப்பதும், சிலர் வயது காரணமாக குற்றச்செயல்களில் இருந்து விலகியிருப்பதும், மற்றவர்கள் ரவுடித்தனத்தை முற்றிலுமாக கைவிட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகள் எண்ணிக்கை 26,400-க்கும் க...