Tuesday, October 14பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரின் சொத்துக்களை முடக்க ஐ.ஜி. உத்தரவு.

ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரின் சொத்துக்களை முடக்க ஐ.ஜி. உத்தரவு.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தரும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அவர்களின் சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட உள்ளன. இந்த உத்தரவை மண்டல அளவிலான காவல் கண்காணிப்பு உயரதிகாரிகள் (ஐ.ஜி.க்கள்) அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் (எஸ்.பி.க்கள்) வழங்கியுள்ளனர். கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, 'ஏ பிளஸ்', 'ஏ', 'பி', 'சி' என வகைப்படுத்தப்பட்டு, மொத்தம் 27,666 ரவுடிகள் பட்டியலில் இருந்தனர். ஆனால், ஆய்வின் போது சிலர் மரணம் அடைந்திருப்பதும், சிலர் வயது காரணமாக குற்றச்செயல்களில் இருந்து விலகியிருப்பதும், மற்றவர்கள் ரவுடித்தனத்தை முற்றிலுமாக கைவிட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகள் எண்ணிக்கை 26,400-க்கும் க...
எய்ட்ஸ், புற்றுநோய் நோய்களின் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை.

எய்ட்ஸ், புற்றுநோய் நோய்களின் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை.

தமிழ்நாடு
எய்ட்ஸ், புற்றுநோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்கள் குறித்து "பூரணமாக குணமாக்கப்படும்" என தெரிவித்து போலியான விளம்பரங்களை வெளியிடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் திரு. ஒய்.ஆர். மானேக்சா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மத்திய அரசிற்கு இடையிலான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தக்கூடிய சிகிச்சை விளம்பரங்களை தடை செய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பார்வையின்மை, புற்றுநோய், எய்ட்ஸ், பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரக கற்கள், நரம்பு மண்டல கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட மொத்தம் 56 வகையான நோய்களை குணப்படுத்துவதாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, பத...
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு: 8 மாவட்டங்களில் தொடர்ந்து மழை வாய்ப்பு

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு: 8 மாவட்டங்களில் தொடர்ந்து மழை வாய்ப்பு

தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மற்றும் நாளையும் எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக மிக கனமழை எதிர்ப்பார்க்கப்படுவதால் 'ரெட் அலர்ட்' (அதிக அபாய எச்சரிக்கை) வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை வரை) அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்னர், நீலகிரியின் அவலாஞ்சியில் 14 செ.மீ.; சாம்ராஜ் எஸ்டேட், மேல்பவானி மற்றும் திருநெல்வேலியின் நாலுமுக்கு பகுதிகளில் தலா 13 செ.மீ.; ஊத்து, காக்காச்சி பகுதிகளில் தலா 12 செ.மீ.; சோலையார் (கோவை) 11 செ.மீ.; மாஞ்சோலை (திருநெல்வேலி), குந்தாபாலம் (நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிகவும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ரெட் ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு, முக்கிய செய்தி
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், இன்று (மே 28) தீர்ப்பு வெளியிடப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு சட்டம் (POCSO) சிறப்பு நீதிமன்றம், தி.மு.க. பிரமுகர் ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்துள்ளது. தண்டனை விவரம் வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இரவு, அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அருகே வந்து, இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 37 வயதான ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தி.மு.க.வின் பிரமுகர் என தெரியவந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக...
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: மே 27, 2025 அன்று, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் (ஒரிசா கடலோரம் அருகே) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்துக்குள் மேலும் வலுப்பெறும் எனவும், தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலெர்ட்: இடி, மின்னலுடன் கனமழை மே 27 (திங்கள்): தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று வேகம் மணிக்கு 40–50 கிமீ வரை வீச வாய்ப்பு. நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை. தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மிக கனமழை ஏற்படக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய...
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

தமிழ்நாடு
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாதங்கள் வளர்ச்சி அடைந்த குட்டி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானை: மே 17ஆம் தேதி, கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் வழியெறிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்தது. அதன் அருகில், அதற்குச் சொந்தமான குட்டி யானையும் பயமுடனும் பரிதாபமாகவும் நின்றுக்கொண்டிருந்தது. உடனடியாக தகவலறிந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவக் குழு போராடியப் பிறகும் உயிரிழப்பு : யானையின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வ...
தமிழ்நாடு அரசில் 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு.

தமிழ்நாடு அரசில் 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு.

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தகவலின் பேரில், மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள "709 உதவி பொறியாளர்" பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு "மே 27, 2025 முதல் ஜூன் 25, 2025 வரை" ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிட விபரம்: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட 47 வகையான பதவிகளுக்காக 615 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மேலும் 94 பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 709 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் கீழ் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10, 2025 வரை நடைபெறும். தேர்வு கட்டணத்தை UPI வழியாக செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்ல...
மதுரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடக்கும் குவாரி பணிகள் – நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன்!

மதுரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடக்கும் குவாரி பணிகள் – நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன்!

தமிழ்நாடு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியில் அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டவிரோதமாக குவாரிப் பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் 2021ஆம் ஆண்டு வரை சுமார் 60 கிரானைட் குவாரிகள் இயங்கி வந்தன. அதில் ஏராளமான குவாரிகளில் இருந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுதொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் விசாரணை நடத்தி, தமிழக அரசுக்கு ரூ.16 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, பிஆர்பி நிறுவன அதிபர் பழனிசாமி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ம...
மதுரையில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததால் மூன்று பேர் பலி.

மதுரையில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததால் மூன்று பேர் பலி.

தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையங்குளம் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இறந்தவர்கள் அம்மா பிள்ளை (65), அவரது 10 வயது பேரன் வீரமணி மற்றும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் வெங்காட்டி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்தனர். மூவரும் உடனடியாக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வெங்காட்டி உயிரிழந்தார். அம்மா பிள்ளை மற்றும் அவரது பேரன் ...
தமிழகத்தின் வேளாண் முன்னேற்றம்: 4 ஆண்டுகளில் சாதனைகள் பட்டியலிட்டது அரசு

தமிழகத்தின் வேளாண் முன்னேற்றம்: 4 ஆண்டுகளில் சாதனைகள் பட்டியலிட்டது அரசு

தமிழ்நாடு, விவசாயம்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வேளாண் வளர்ச்சி 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாகும். இதைத் தொடர்ந்து, மொத்தம் 5 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, ₹1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2012 முதல் 2021 வரை சராசரியாக 1.36% அளவிலிருந்த வேளாண் வளர்ச்சி, திமுக ஆட்சி தொடங்கிய 2021 முதல் 2024 வரையில் 5.66% ஆக உயர்ந்துள்ளது. இது வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது. முக்கிய பயிர்களின் உற்பத்தி சாதனைகள் முதலிடம்: கேழ்வரகு, கொய்யாஇரண்டாம் இடம்: மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் மூன்றாம் இடம்: வேர்க்கடலை, தென்னை 2020-21 ...