Friday, November 28பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

91 கோடி ரூபாய் அபராதம்! சிங்கம்புணரி குவாரி விபத்துக்கு கடும் தண்டனை

91 கோடி ரூபாய் அபராதம்! சிங்கம்புணரி குவாரி விபத்துக்கு கடும் தண்டனை

தமிழ்நாடு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் நடந்த குவாரி விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில், குவாரி உரிமையாளர் மேகவர்ணத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். விபத்து எப்படி நடந்தது? நாள்: மே 20, காலை 9:25 மணி இடம்: மேகா புளூ மெட்டல்ஸ் குவாரி, மல்லாக்கோட்டை காரணம்: பாறை வெடிக்கு தயாராகும் போது, மணல் அள்ளும் இயந்திரம் குழி தோண்டியதால் ஏற்பட்ட அதிர்வில் பாறை சரிந்தது. பலி: 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 1 படுகாயம். பலியானவர்கள்: முருகானந்தம் (49) - ஓடைப்பட்டி ஆறுமுகம் (65) - மேலூர் ஆண்டிச்சாமி (50) கணேசன் (43) - குழிச்சிவல்பட்டி ஹர்ஜித் (28) - ஓடிசா (இயந்திர ஓட்டுநர்) மைக்கேல்ராஜ் (43) - எட்டயபுரம் (படுகாயம்) கை...
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆன்லைன் நடைச்சீட்டு’ கட்டாயம் – கனிம வளத்துறை புதிய உத்தரவு

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆன்லைன் நடைச்சீட்டு’ கட்டாயம் – கனிம வளத்துறை புதிய உத்தரவு

தமிழ்நாடு
தமிழகத்தில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் நடைச்சீட்டு (Online Transit Pass) கட்டாயம் என கனிம வளத்துறை கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட தனியார் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெட்டப்படும் கருங்கற்கள், கிரஷர் ஆலைகள் மூலமாக நொறுக்கப்பட்டு ஜல்லியாகவும், அதேபோல் சுத்திகரிக்கப்பட்டு எம்-சாண்ட் (M-Sand) ஆகவும் தயாராகின்றன. இப்பொருட்கள் கட்டுமானத் தேவைகளுக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த வகையான கனிமங்களின் சுரங்க வேலைகளை கண்காணிக்க, இதுவரை ‘மேனுவல்’ முறையில் நடைச்சீட்டுகள் (Transit Passes) வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த முறையில் பல குறைகளை சந்தித்து வந்தது. குறிப்பாக, ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்தி அதிக அளவிலான கனிமங்களை சட்டவிரோதமாக...
” திரைநீக்கு-II ” – தமிழகத்தில் 136 சைபர் குற்றவாளிகள் கைது.

” திரைநீக்கு-II ” – தமிழகத்தில் 136 சைபர் குற்றவாளிகள் கைது.

தமிழ்நாடு
ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றங்களுக்கு மிகப்பெரிய அடியாக, தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு (CCW) ஜூன் 2 முதல் ஜூன் 4, 2025 அதிகாலை வரை நடத்தப்பட்ட 'திரைநீக்கு-II' என்ற சிறப்பு நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் இருந்து 136 சைபர் குற்றவாளிகளைக் கைது செய்தனர். டிசம்பர் 2024 'திரைநீக்கு-I' நடவடிக்கையில் 76 நபர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, டிஜிட்டல் குற்றங்களுக்கு எதிரான மாநிலத்தின் நடவடிக்கைகளில் "ஆபரேஷன் திரைநீக்கு (முகமூடி அவிழ்ப்பு)-II" முக்கியமானதாகும். தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 159 தனித்துவமான சைபர் கிரைம் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் தான் இந்த கைது செய்யப்பட்ட 136 குற்றவாளிகள். இந்த நடவடிக்கையில், ஆறு முக்கியமான வங்கி முகவர்களை அடையாளம் கண்டு பிடித்துள்ளனர் சைபர் கிரிம் புலனாய்வுப் பிரிவினர். சட்டவிரோத நிதி மோசடி செய்வதில் இந்த நபர்கள் முக்கிய பங்கு வகித்ததாக அதிகாரிகள் தெர...
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 37 வயது நபருக்கு சென்னையில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் திங்கள்கிழமை 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அரசுத் தரப்பு நிரூபித்த 11 குற்றச்சாட்டுகளுக்கும் தண்டனையை மகிளா நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி அறிவித்தார். மேலும், தண்டனைகள் ஏககாலத்தில் இயங்கும் என்றும் கூறினார். "அவருக்கு எந்த சலுகைகளோ அல்லது முன்கூட்டியே விடுதலை செய்யவோ உரிமை இல்லை" என்று தீர்ப்புக்குப் பிறகு அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களிடம் கூறினார். "அவரது தொலைபேசிதான் இந்த வழக்கின் ஆயுதம்" என்று ஜெயந்தி கூறினார். "குற்றம் நடந்த நாளில் அவரது தொலைபேசி செயல்பாடுகளை ஆய்வு செய்த தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம், மேலும் அவர் தனது தொலைபேசியை விமானப் பயன்முறையில் (Flight Mode) வைத்திர...
ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரின் சொத்துக்களை முடக்க ஐ.ஜி. உத்தரவு.

ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரின் சொத்துக்களை முடக்க ஐ.ஜி. உத்தரவு.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தரும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அவர்களின் சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட உள்ளன. இந்த உத்தரவை மண்டல அளவிலான காவல் கண்காணிப்பு உயரதிகாரிகள் (ஐ.ஜி.க்கள்) அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் (எஸ்.பி.க்கள்) வழங்கியுள்ளனர். கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, 'ஏ பிளஸ்', 'ஏ', 'பி', 'சி' என வகைப்படுத்தப்பட்டு, மொத்தம் 27,666 ரவுடிகள் பட்டியலில் இருந்தனர். ஆனால், ஆய்வின் போது சிலர் மரணம் அடைந்திருப்பதும், சிலர் வயது காரணமாக குற்றச்செயல்களில் இருந்து விலகியிருப்பதும், மற்றவர்கள் ரவுடித்தனத்தை முற்றிலுமாக கைவிட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகள் எண்ணிக்கை 26,400-க்கும் க...
எய்ட்ஸ், புற்றுநோய் நோய்களின் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை.

எய்ட்ஸ், புற்றுநோய் நோய்களின் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை.

தமிழ்நாடு
எய்ட்ஸ், புற்றுநோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்கள் குறித்து "பூரணமாக குணமாக்கப்படும்" என தெரிவித்து போலியான விளம்பரங்களை வெளியிடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் திரு. ஒய்.ஆர். மானேக்சா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மத்திய அரசிற்கு இடையிலான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தக்கூடிய சிகிச்சை விளம்பரங்களை தடை செய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பார்வையின்மை, புற்றுநோய், எய்ட்ஸ், பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரக கற்கள், நரம்பு மண்டல கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட மொத்தம் 56 வகையான நோய்களை குணப்படுத்துவதாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, பத...
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு: 8 மாவட்டங்களில் தொடர்ந்து மழை வாய்ப்பு

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு: 8 மாவட்டங்களில் தொடர்ந்து மழை வாய்ப்பு

தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மற்றும் நாளையும் எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக மிக கனமழை எதிர்ப்பார்க்கப்படுவதால் 'ரெட் அலர்ட்' (அதிக அபாய எச்சரிக்கை) வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை வரை) அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்னர், நீலகிரியின் அவலாஞ்சியில் 14 செ.மீ.; சாம்ராஜ் எஸ்டேட், மேல்பவானி மற்றும் திருநெல்வேலியின் நாலுமுக்கு பகுதிகளில் தலா 13 செ.மீ.; ஊத்து, காக்காச்சி பகுதிகளில் தலா 12 செ.மீ.; சோலையார் (கோவை) 11 செ.மீ.; மாஞ்சோலை (திருநெல்வேலி), குந்தாபாலம் (நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிகவும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ரெட் ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு, முக்கிய செய்தி
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், இன்று (மே 28) தீர்ப்பு வெளியிடப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு சட்டம் (POCSO) சிறப்பு நீதிமன்றம், தி.மு.க. பிரமுகர் ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்துள்ளது. தண்டனை விவரம் வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இரவு, அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அருகே வந்து, இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 37 வயதான ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தி.மு.க.வின் பிரமுகர் என தெரியவந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக...
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: மே 27, 2025 அன்று, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் (ஒரிசா கடலோரம் அருகே) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்துக்குள் மேலும் வலுப்பெறும் எனவும், தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலெர்ட்: இடி, மின்னலுடன் கனமழை மே 27 (திங்கள்): தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று வேகம் மணிக்கு 40–50 கிமீ வரை வீச வாய்ப்பு. நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை. தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மிக கனமழை ஏற்படக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய...
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத குட்டி!

தமிழ்நாடு
கோவையில் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாதங்கள் வளர்ச்சி அடைந்த குட்டி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானை: மே 17ஆம் தேதி, கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் வழியெறிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்தது. அதன் அருகில், அதற்குச் சொந்தமான குட்டி யானையும் பயமுடனும் பரிதாபமாகவும் நின்றுக்கொண்டிருந்தது. உடனடியாக தகவலறிந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவக் குழு போராடியப் பிறகும் உயிரிழப்பு : யானையின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வ...