Tuesday, December 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

மூடிய அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு: தமிழக அரசு நடவடிக்கை!

மூடிய அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு: தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாடு
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த மாதங்களில் மூடப்பட்டிருந்த அங்கன்வாடி மையங்களை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மூடப்பட்ட மையங்களை மீண்டும் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மூடிய மையங்கள் – காரணம் மற்றும் பின்விளைவுகள்:தமிழகத்தில் மொத்தம் 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை குழந்தைகளின் ஆரம்ப பராமரிப்பு மற்றும் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய சமூக நலத்திட்ட மையங்களாக விளங்குகின்றன. எனினும், கடந்த காலங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் குழந்தைகள் வரத்து குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் பல மையங்கள் இயங்காமல் இருந்தன. இந்த நிலையிலேயே, 2024-25ஆம் நிதியாண்டில் மட்டும் 501 மையங்கள் மூடப்பட்டன. இது பெற்றோர்களிடையே நம்பிக்கையை குலைத்ததோடு, குழந்தைகளின் அடிப்படை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளும் பாதிக்கப்...
தேனி நகராட்சி கமிஷனர் மற்றும் மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!

தேனி நகராட்சி கமிஷனர் மற்றும் மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!

தமிழ்நாடு
வருமானத்தை விட அதிகமாக ரூ.2.73 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக தேனி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் அவரது மனைவி பிளாரன்ஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை போரூர் அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ஏகராஜ் (வயது 58), 10 மாதங்களுக்கு முன் தேனி நகராட்சியின் கமிஷனராக பணியேற்றிருந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள இவர், முந்தைய காலகட்டங்களில் பல்வேறு நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது மனைவி பிளாரன்ஸ் (வயது 50) சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஏகராஜ் 1994ம் ஆண்டு எரிசக்தித் துறையில் தட்டச்சராக அரசு பணியில் சேர்ந்தவர். தொடர்ந்து 23 ஆண்டுகள் பணிப்புரிந்த பிறகு, 2017ம் ஆண்டு நகராட்சி கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ...
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

தமிழ்நாடு
2025-ம் ஆண்டில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விளம்பரங்களில் எழுத்துரு அளவு, திட்டத்தின் முகவரி, வசதிகள் பற்றிய விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் பதிவு எண் மற்றும் QR குறியீட்டை விளம்பரங்களில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.  விளம்பரங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்: எழுத்துரு அளவு:விளம்பரங்களில் எழுத்துரு அளவு 12க்கு குறையாமல் இருக்க வேண்டும்.  திட்டத்தின் முகவரி:திட்டத்தின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளபடியே தெரிவிக்க வேண்டும்.  வசதிகள்:திட்டத்தில் உள்ள அனைத்து வசதிகள் பற்றிய விவரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டும்.  பதிவு எண் மற்றும் QR குறியீடு:ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் பதிவு எண...
கிராம உதவியாளர் பணிக்கு 2299 வேலைவாய்ப்புகள்!

கிராம உதவியாளர் பணிக்கு 2299 வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு
தமிழ்நாடு வருவாய்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர்களின் பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100/- ரூ.35,100/ என்ற ஊதியகட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வாரியாக மொத்தம் 2299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தினசரி பத்திரிக்கை விளம்பரம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பகத்திற்கு தெரிவித்தல், இதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிக்கை விளம்பரம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பகத்திற்கு 06.07.2025 தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 04.08.2025 ஆகும். 02.09.2025 அன்று தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கு, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில், தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்ட...
போலீஸ் காவலில் இறந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை!

போலீஸ் காவலில் இறந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை!

தமிழ்நாடு
தமிழ்நாட்டின் சிவகங்கையில் கோயில் காவலராகப் பணியாற்றிய 28 வயதான அஜித் குமார், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் நடந்த திருட்டைத் தொடர்ந்து விசாரணைக்காக விசாரணைக்காக முதலில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 44 வெளிப்புற மற்றும் பல உள் காயங்கள் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. 3 செ.மீ நீளமுள்ள ஒரு வடு மற்றும் மூன்று சிகரெட் தீக்காயங்களின் வடுக்கள் என்று அறிக்கை கூறுகிறது. மேலும் அவரது நெற்றி, கைகள், முழங்கால், கால் மற்றும் இடுப்புப் பகுதியில் பல சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை காட்டுகிறது. காவல்துறையினர் தங்கள் காவலில் இருந்தபோது அவரை சித்திரவதை செய்து கொன்றதாக அவரது குடும்பத்தினர் மாநில அரசிடம் கூறி வருகின்றனர். முதல்வர் எம்.கே. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி செய்யும் மாநிலத்தில் இந்த வழக்கு ஒரு பெரிய அரசியல் சர்ச...
சென்னை நகரில் கோகைன் விற்பனை கும்பல்!

சென்னை நகரில் கோகைன் விற்பனை கும்பல்!

தமிழ்நாடு
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான பெரும் கும்பலை நுங்கம்பாக்கம் போலீசார் பிடித்த சம்பவம் சினிமா உலகத்தையும் law and order துறையையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் (வயது 46) மற்றும் கிருஷ்ணா (வயது 47) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத் (33), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் (38), கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின் (35) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவர்கள் மூலம் சினிமா துறையில் புகழ்பெற்றவர்கள் உள்ளிட்ட பலருக்கு கோகைன் விநியோகிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கெவின் பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்:காவலில் விசாரணை செய்யப்பட்ட கெவின், போலீசாருக்கு முக்கிய தகவல்களை வ...
தேனியில் விசாரணைக் கைதி மீது போலீசார் தாக்குதல்!

தேனியில் விசாரணைக் கைதி மீது போலீசார் தாக்குதல்!

தமிழ்நாடு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ உட்பட 5 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பான பின்னணிதேவதானப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (31), கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மதுபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக புகார் பெறப்பட்டது. இதையடுத்து, காவல்துறை அங்கு சென்று ரமேஷை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றது. அங்கு எஸ்.ஐ மணிகண்டன், அவருக்கு எச்சரிக்கை வழங்கி வழக்குப் பதிவு செய்து, ஸ்டேஷன் ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். வீடியோ கேள்விக்குரிய ஆதாரம்இதற்கிடையில், கெங்குவார்பட...
தமிழகத்தில் போலீஸ் ‘தனிப்படைகள்’ ஒட்டுமொத்தமாக கலைப்பு – டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் போலீஸ் ‘தனிப்படைகள்’ ஒட்டுமொத்தமாக கலைப்பு – டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு
திருப்புவனத்தில் நடந்த அஜித்குமார் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையை கடுமையாக சீர்குலைத்திருப்பதுடன், அரசு மீது கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. சம்பவத்தின் பின்னணி பின்வருமாறு:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில், நகைகள் திருடுபோனதாக வாடிக்கையாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து, அந்தத் தொடர்பில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்தக் காயங்களால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தமிழக அரசு பெரும் பதற்றத்திற்குள்ளானது. ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக ஊடகங...
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு நிவாரணம்!

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு நிவாரணம்!

தமிழ்நாடு
போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பரிவு தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அஜித்குமார் மாயமான நிலையில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. அவரது மறைவால் குடும்பமே திடீரென துன்பத்தில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுப்படி மாநில கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியகருப்பன் நேற்று நேரில் சென்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போது அமைச்சர் பெரியகருப்பன் தமிழக முதல்வர் ஸ்டாலினை மொபைல் போனில் அழைத்து குடும்பத்துடன் பேச வைத்தார். முதல்வர் ஸ்டாலின் அஜித்குமாரின் தாய் மாலதியுடன் பேசினார். அப்போது அவர், “ரொம்ப சோர்வா இருக்காதீங்க...
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் : 72,943 பேர் பதிவு செய்துள்ளனர்

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் : 72,943 பேர் பதிவு செய்துள்ளனர்

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நோக்கி, விண்ணப்பங்கள் பதிவுசெய்யும் செயல்முறை ஜூன் 6ம் தேதி தொடங்கி, ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த காலக்கெட்டுக்குள் மொத்தம் 72,943 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7.5% சிறப்பு ஒதுக்கீட்டுக்குள் மட்டும் 42,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் NEET (நீட்) மதிப்பெண்கள் பற்றிய தகவல்களை மத்திய அரசிடமிருந்து பெறும் பணிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில், கணினி மூலம் தரவரிசை (merit list) பட்டியல் தயார் செய்யப்படும். அதன் பிறகு விரைவில் அந்த பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிக...